கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசு அளித்த தங்க நகைகள்! மதிப்பு என்ன தெரியுமா?

vijayawada-kanakadurga-amman-jewels
vijayawada-kanakadurga-amman-jewels

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசாங்கம் அளித்த தங்க நகைகள். காணிக்கையின் மதிப்பு என்ன தெரியுமா?

சந்திரபாபு அரசாட்சியில் இடித்தலுக்கு ஆளான கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவில்களின் புனரமைப்பு மற்றும் ஜீரணோத்தாரணத்திற்காக முகூர்த்தம் கூட முடிவு செய்தார்கள்.

வெள்ளிக்கிழமையே புனரமைப்பு பணிகளுக்கு ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி அஸ்திவாரம் போட்டார்.
சென்ற அரசாங்கம் விஜயவாடாவில் இடித்த ஒன்பது ஆலயங்களின் புனரமைப்பு வேலைகளை தொடங்கி வைத்தார். காலை சரியாக 11.01 நிமிஷத்திற்கு சனைஸ்வரன் ஆலய புனரமைப்பு நடக்கவிருக்கும் இடத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வெட்டு வெளியிட்டார்.

vijayawada-kanakadurga-amman-jewels1
vijayawada-kanakadurga-amman-jewels1

அதன்பிறகு இந்திரகீலாத்ரி மலை மீதுள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு தங்க நகைகளை அளித்தார். இதன் மதிப்பு ஆறரை லட்சம் ரூபாய்கள். ஆறரை இலட்சம் ரூபாய்கள் செலவில் கனக துர்கா தேவிக்கு மூன்று ஆபரணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்வித்தார்கள். வைரங்கள் பொதித்த மூக்குத்தி, பொட்டு, புல்லாக்கு ஆகியவை இவற்றில் உள்ளன. இவற்றின் எடை சுமார் 28.380 கிராம். வைரம் பதித்த நத்து ( மூக்குத்தி),
பொட்டு, புல்லாக்கு இவற்றை காணிக்கையாக அம்மனுக்கு சமர்ப்பித்தார்கள்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

மாநிலத்தில் கோவில்களும் கோவில் சிலைகளும் வரிசையாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜெகன் அரசாங்கம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட 9 கோவில்களுக்கு புனரமைப்பு தொடங்கியது. புனரமைப்பு பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி அஸ்திவாரம் இட்டு தொடங்கிவைத்த செயலும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

vijayawada-kanakadurga-amman-jewels2
vijayawada-kanakadurga-amman-jewels2

இந்த வரிசையில் ராகு-கேது ஆலயம், சீதம்மா பாதாலு, தக்ஷிணமுக ஆஞ்சநேய சுவாமி கோவில், சனைஸ்வரர் ஆலயம், பொட்டு பொம்மை, துர்கை கோவில் படிக்கட்டு அருகில் மற்றுமொரு ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், சீதா ராம லக்ஷ்மண சமேத ஸ்ரீ தாசாஞ்சநேயர் கோவில், வீரபாகு கோவில், ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், கோசாலை ஆகியவற்றை புனரமைப்பு செய்ய உள்ளார்கள்.

ALSO READ:  இன்று சனி பெயர்ச்சி: சிறப்பு ரயில்கள் இயக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories