கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசு அளித்த தங்க நகைகள்! மதிப்பு என்ன தெரியுமா?

Published:

vijayawada-kanakadurga-amman-jewels
vijayawada-kanakadurga-amman-jewels

விஜயவாடா கனகதுர்கா அம்மனுக்கு ஜகன் அரசாங்கம் அளித்த தங்க நகைகள். காணிக்கையின் மதிப்பு என்ன தெரியுமா?

சந்திரபாபு அரசாட்சியில் இடித்தலுக்கு ஆளான கோவில்களை புனரமைப்பு செய்வதற்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவில்களின் புனரமைப்பு மற்றும் ஜீரணோத்தாரணத்திற்காக முகூர்த்தம் கூட முடிவு செய்தார்கள்.

வெள்ளிக்கிழமையே புனரமைப்பு பணிகளுக்கு ஒய்எஸ் ஜகன் மோகன் ரெட்டி அஸ்திவாரம் போட்டார்.
சென்ற அரசாங்கம் விஜயவாடாவில் இடித்த ஒன்பது ஆலயங்களின் புனரமைப்பு வேலைகளை தொடங்கி வைத்தார். காலை சரியாக 11.01 நிமிஷத்திற்கு சனைஸ்வரன் ஆலய புனரமைப்பு நடக்கவிருக்கும் இடத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கல்வெட்டு வெளியிட்டார்.

vijayawada-kanakadurga-amman-jewels1
vijayawada-kanakadurga-amman-jewels1

அதன்பிறகு இந்திரகீலாத்ரி மலை மீதுள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோவிலுக்கு தங்க நகைகளை அளித்தார். இதன் மதிப்பு ஆறரை லட்சம் ரூபாய்கள். ஆறரை இலட்சம் ரூபாய்கள் செலவில் கனக துர்கா தேவிக்கு மூன்று ஆபரணங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் செய்வித்தார்கள். வைரங்கள் பொதித்த மூக்குத்தி, பொட்டு, புல்லாக்கு ஆகியவை இவற்றில் உள்ளன. இவற்றின் எடை சுமார் 28.380 கிராம். வைரம் பதித்த நத்து ( மூக்குத்தி),
பொட்டு, புல்லாக்கு இவற்றை காணிக்கையாக அம்மனுக்கு சமர்ப்பித்தார்கள்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

மாநிலத்தில் கோவில்களும் கோவில் சிலைகளும் வரிசையாக தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் ஜெகன் அரசாங்கம் இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ள விஷயம் குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட 9 கோவில்களுக்கு புனரமைப்பு தொடங்கியது. புனரமைப்பு பணிகளை ஜெகன்மோகன் ரெட்டி அஸ்திவாரம் இட்டு தொடங்கிவைத்த செயலும் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

vijayawada-kanakadurga-amman-jewels2
vijayawada-kanakadurga-amman-jewels2

இந்த வரிசையில் ராகு-கேது ஆலயம், சீதம்மா பாதாலு, தக்ஷிணமுக ஆஞ்சநேய சுவாமி கோவில், சனைஸ்வரர் ஆலயம், பொட்டு பொம்மை, துர்கை கோவில் படிக்கட்டு அருகில் மற்றுமொரு ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், சீதா ராம லக்ஷ்மண சமேத ஸ்ரீ தாசாஞ்சநேயர் கோவில், வீரபாகு கோவில், ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ணர் கோவில், கோசாலை ஆகியவற்றை புனரமைப்பு செய்ய உள்ளார்கள்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img