சுபாஷிதம்: கர்ம சித்தாந்தம்!

Published:

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

96. கர்ம சித்தாந்தம்.

ஸ்லோகம்:

சுகஸ்ய துக்கஸ்ய ந கோ௨பி தாதா பரோ ததாதீதி குபுத்திரேஷா !
அஹம் கரோமீதி வ்ருதா௨பிமான: ஸ்வகர்ம சூத்ரக்ரதிதோ ஹி லோக: (ஜந்து:) !!

-ஆத்யாத்ம ராமாயணம் (2-6-5)

பொருள்:

தீதும் நன்றும் பிறர் தர வாரா. யாரோ இவற்றை ஏற்படுத்துகிறார்கள் என்று நினைப்பது அறியாமை. என்னால்தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணுவது வீண் மமதை.  ஒவ்வொருவரும் தம்தம் வினைப்பயன் என்னும் கயிற்றால் தளைக்கப்பட்டு உள்ளார்கள். 

விளக்கம்:

இன்பமும் துன்பமும் எவ்வாறு நிகழும் என்பதை கர்ம சித்தாந்தத்தை ஆதாரமாகக்கொண்டு சிந்திக்கச் செய்யும் ஸ்லோகம் இது. நான் செய்கிறேன் என்ற வீணான தற்பெருமையை விட்டுவிட வேண்டும். கடமை உணர்வோடு பணி செய் என்று போதிக்கும் சுலோகம். கருட புராணத்தில் இந்த ஸ்லோகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களே இந்த பிறவியில் இன்ப துன்பங்களாக விளைகின்றன என்பதை உணரவேண்டும். ‘கொடுத்து வைத்தவர்’ என்ற சொல்லைக் கேட்டிருப்போம். முற்பிறவியில் பிறருக்கு உணவளித்தவருக்கு இப்பிறவியில் சுகமும் இன்பமும் வந்து சேரும். கடந்த பிறவியில் பிறருக்கு தானம் அளித்தவர் இப்பிறவியில் செல்வந்தராக விளங்குவார்.   

நற்செயல் புரிந்தவருக்கு நன்மையும் தீய செயல்  செய்தவருக்கு தீமையும் விளையும் என்பதே கர்ம சித்தாந்தம். இது குறித்த புரிதல் இன்றி நம் துன்பங்களுக்கு பிறரைப் பொறுப்பாக்கி  நிந்திப்பதால் சமுதாயத்தில் சமரசம் கெட்டுப் போகிறது. பகை விரோதம், பழிக்குப்பழி போன்றவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் கர்ம சித்தாந்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img