சுபாஷிதம்: ஆரோக்கியமானவர் யார்?

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

98. ஆரோக்கியமானவர் யார்?

ஸ்லோகம்:

சமதோஷ: சமாக்னிஸ்ச சமதாதுமலக்ரிய: !
ப்ரசன்னாத்மேந்த்ரியமனா: ஸ்வஸ்த இத்யபிதீயதே !!
சுஷ்ருத சம்ஹிதை 

பொருள்:

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை, சமமான அக்னி வெப்பம் (பசி எடுப்பது, உண்ட உணவு செரிப்பது),  சமமான தாதுக்கள் ( ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களும்  ஏற்றத்தாழ்வின்றி சம நிலையில் இருப்பது), சரியான அளவில் மலம், சிறுநீர் வெளியேற்றம்,  இவற்றோடு கூட பிரசாந்தமான மனம், ஆத்மா, புலன்கள் கொண்டவனே ஆரோக்கியமான மனிதன்.

விளக்கம்:

ஆரோக்கியமானவர் யார் என்று  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருத சம்ஹிதை அளித்துள்ள இந்த விளக்கம் நவீன மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்துகிறது.

மனிதத் தலை மிகச் சிக்கலானது. பல நோய்களுக்கு மூலஸ்தானம்.  அதனை அறிந்த ரிஷிகள் புலன்கள், மனம், ஆத்மா இவற்றை பிரசாந்தமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். அப்படி வைத்துக் கொள்பவரே ஆரோக்கியமானவர் என்று கூறி அவற்றை எவ்வாறு பிரசாந்தமாக வைத்துக் கொள்வது என்பதை தெரிவிக்கும் யோக சூத்திரங்களை அளித்துள்ளார்கள்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

தோஷங்கள், தாதுக்களின் குறைபாடுகள், பிற உடல் பிரச்சனைகள் இவற்றின் நிவாரணத்திற்கு ஔஷதங்களைக் கூறியுள்ளார்கள்.

புலன்களை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு ஞானம் அவசியம் தேவை. புலனின்பத்தின் பின்னால் மனம் ஓடாமல் காப்பது ஞானம். நல்லதையே பேசி, நல்லதையே நினைத்து, நல்லதையே கேட்டு, கேட்டதை நினைவில் நிறுத்துவது போன்றவை புலன்களுக்கு யோகப்பயிற்சி.

மனத் திருப்தியே மனதுக்கு கிடைக்கும்  ஔஷதம். இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, இல்லாதவற்றுக்காக  ஏங்காதிருப்பது ஆறாவது புலனான மனதுக்கு மருந்து போன்றது. 

இவ்விதமாக உடல், மன ஆரோக்கியத்தை விளக்கிய நம் ரிஷிகளின் திறமை அசாதாரணமானது. அத்தகைய ரிஷிகளின் வாரிசுகள் நாம். 

வெறும் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனத்தில் கொண்டு முதலில்  மருந்தளித்த நவீன மருத்துவர்கள் தற்போது மனதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் ஆத்மா பற்றிய ஞானம் அவர்களுக்குப்   புரிபடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories