February 14, 2025, 9:58 AM
26.3 C
Chennai

சுபாஷிதம்: ஆரோக்கியமானவர் யார்?

subhashitam_1-5
subhashitam_1-5

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

98. ஆரோக்கியமானவர் யார்?

ஸ்லோகம்:

சமதோஷ: சமாக்னிஸ்ச சமதாதுமலக்ரிய: !
ப்ரசன்னாத்மேந்த்ரியமனா: ஸ்வஸ்த இத்யபிதீயதே !!
சுஷ்ருத சம்ஹிதை 

பொருள்:

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலை, சமமான அக்னி வெப்பம் (பசி எடுப்பது, உண்ட உணவு செரிப்பது),  சமமான தாதுக்கள் ( ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களும்  ஏற்றத்தாழ்வின்றி சம நிலையில் இருப்பது), சரியான அளவில் மலம், சிறுநீர் வெளியேற்றம்,  இவற்றோடு கூட பிரசாந்தமான மனம், ஆத்மா, புலன்கள் கொண்டவனே ஆரோக்கியமான மனிதன்.

விளக்கம்:

ஆரோக்கியமானவர் யார் என்று  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சுஸ்ருத சம்ஹிதை அளித்துள்ள இந்த விளக்கம் நவீன மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்துகிறது.

மனிதத் தலை மிகச் சிக்கலானது. பல நோய்களுக்கு மூலஸ்தானம்.  அதனை அறிந்த ரிஷிகள் புலன்கள், மனம், ஆத்மா இவற்றை பிரசாந்தமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்கள். அப்படி வைத்துக் கொள்பவரே ஆரோக்கியமானவர் என்று கூறி அவற்றை எவ்வாறு பிரசாந்தமாக வைத்துக் கொள்வது என்பதை தெரிவிக்கும் யோக சூத்திரங்களை அளித்துள்ளார்கள்.

தோஷங்கள், தாதுக்களின் குறைபாடுகள், பிற உடல் பிரச்சனைகள் இவற்றின் நிவாரணத்திற்கு ஔஷதங்களைக் கூறியுள்ளார்கள்.

புலன்களை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு ஞானம் அவசியம் தேவை. புலனின்பத்தின் பின்னால் மனம் ஓடாமல் காப்பது ஞானம். நல்லதையே பேசி, நல்லதையே நினைத்து, நல்லதையே கேட்டு, கேட்டதை நினைவில் நிறுத்துவது போன்றவை புலன்களுக்கு யோகப்பயிற்சி.

மனத் திருப்தியே மனதுக்கு கிடைக்கும்  ஔஷதம். இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, இல்லாதவற்றுக்காக  ஏங்காதிருப்பது ஆறாவது புலனான மனதுக்கு மருந்து போன்றது. 

இவ்விதமாக உடல், மன ஆரோக்கியத்தை விளக்கிய நம் ரிஷிகளின் திறமை அசாதாரணமானது. அத்தகைய ரிஷிகளின் வாரிசுகள் நாம். 

வெறும் உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனத்தில் கொண்டு முதலில்  மருந்தளித்த நவீன மருத்துவர்கள் தற்போது மனதையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். இன்னும் ஆத்மா பற்றிய ஞானம் அவர்களுக்குப்   புரிபடவில்லை.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.14 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரை மாட்டுத்தாவணி பகுதி தோரணவாயில் இடிப்பில் விபத்து; பொக்லைன் ஆபரேடர் உயிரிழப்பு!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயில் இடிக்கும் பணியின் போது பொக்லைன் இயந்திரத்தின் மீது கட்டிட தூண் இடிந்து விழுந்து விபத்து

IND Vs ENG ODI: மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி!

இதனால் இந்திய அணி 142 ரன் கள் வித்தியாசத்தி வென்றது. தொடரின் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories