2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

2008ல் உலகமே வீழ்ந்தபொழுது இந்தியா மட்டும் எப்படி எழுந்தது என்பதிற்கு அகிலேஷ் யாதவ் அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார், அது முற்றிலும் உண்மை. அப்போது இந்தியா எழுந்தது இணை பொருளாதாரத்தினால் மட்டுமே.

அது என்ன இணை பொருளாதாரமென்றால் கருப்பு பணத்தினால் ஏற்பட்ட இணை பொருளாதார மேம்பாடுதான் அது.

அது சரியான முன்னேற்றம் அல்ல என்பதிற்கு பல சான்றுகள் உள்ளன, 2008க்கு பிறகான உட்கட்டமைப்பு எந்த அளவிற்கு உயர்ந்தது? உலகம் வீழ்ந்த நிலையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் வாய்ப்பு குறைவே.  நீங்கள் கூறியபடி கச்சா எண்ணை வானளவு. இந்த சூழலில் இந்தியா மட்டும் எழுந்ததிற்கு இந்த நேரம் சரியான காரணமிருந்தால் அதனை கூறியிருக்கலாமே, கடந்த அரசு? ஏன் கூறாமல் அதனை பேச மறுக்கின்றது?

காரணம் என்னவெனில், மொத்த கருப்பு பணமும் வெளி வர ஆரம்பித்தது, இது முதலில் ரியல் எஸ்ட்டேட் மூலம் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டது.

இதன்மூலம் பல புராஜெக்ட்டுகள் பெயரளவில் போடப்பட்டு, அந்த பகுதியில் இருந்த விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டன. இன்றளவும் ஒவ்வொரு மாநகரத்திலும் 2009ம் ஆண்டு போடப்பட்ட புதிய புராஜெக்ட்டுகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவை அனைத்துமே இன்று புல் புதர் மண்டிக்கிடக்கின்றது. உடனே இந்த அரசு கைவிட்டுவிட்டது என்று கூறாதீர்கள். 2009ல் இருந்து முழுமையாக 5 ஆண்டுகள் இதே உத்தமர் மன்மோகன் தான் பிரதமர். ஆனாலும் ஒரு திட்டமும் சொன்னபடி வரவில்லை. ஆனால் அந்த புராஜெக்ட்டுகளைக் காரணம் காட்டி அனைத்து இடங்களும் பலமாக விற்றுத்தீர்ந்தது. பல விவசாயிகள் தங்கள் நிலத்தினை விற்று புது பணக்காரர்கள் ஆனார்கள்.

இது இந்தியா முழுமையும் நடந்தது. இதற்கு ஏற்ப 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தினைக் கொண்டுவந்து விவசாயம் செய்யமுடியாதபடி திட்டமிட்டு காய் நகர்த்த, நல்ல விலை கிடைக்க ஏன் விவசாயம் என்று பலர் பணத்தினை வாங்கி பணக்காரர்கள் ஆகினர். இதனால் இவர்கள் வாங்கும் திறன் திடீரென அதிகரிக்க..

அடுத்ததாக கட்டுமானத்துறைக்கு இந்த பணம் கைமாறியது, வீட்டில் இருந்து அடுத்தது எப்ஃம்சிஜியில் இந்த பணம் கைமாற, அடுத்தது ஆடம்பரப் பொருட்கள் இப்படி பணம் சுற்ற ஆரம்பிக்க, அந்த நேரமிருந்த ப.சி யும், பொருளாதார மேதை மன்மோகனும் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்க்க, இந்திய பொருளாதாரமே போலியாக ஏற்றிக்காட்டப்பட்டது.

இதன் விளைவு என்ன தெரியுமா? 2009ல் இந்தியா முழுக்க பல போலி நிதிநிறுவனங்கள் தோன்றி பணம் சூறைவிடப்பட்டது, 30% வட்டி என்று கொள்ளையடித்தனர் பணத்தினை. சாதாரணமாக 4000ம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் எனக்கு சும்மா இருந்தாலே இவ்வளவு பணம் கிடைக்கிறதே நான் ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று யோசிக்கும் அளவிற்கு பணம் பாய்ந்தது.

குறைந்த பட்ச சம்பளம் உயர்ந்தது, பல ஜவுளிக்கடல்கள் திடீரென முளைத்தன. இப்படி பல பல நிகழ்வுகள். ஆனால் இப்படி புஸ்ஸென்று கிளம்பிய சோடா பாட்டில் கேஸ், 2012ம் ஆண்டே பொங்கி வடியத் துவங்கியது, வேலை வாய்ப்புத் திண்டாட்டம் 2012லியே ஆரம்பித்து விட்டது. இந்த பொருளாதார மேதைகளின் முட்டாள்தனத்தினால், பண வீக்கம் தாறுமாறாக ஏற, ஒரு கட்டத்தில் ப.சி அப்போதைய ஆர்பிஐ கவர்னரிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்திய ரூபாயின் மதிப்பும் தாறுமாறாக வீழ்ந்தது, வங்கியின் மூலம் இவர்கள் அள்ளித் தெளித்து மக்கள் பணத்தினை சூறையாடியதின் விளைவு வராக்கடன் அதிகரித்தது, இந்திய கையிருப்பு மிகவும் குறைந்தது. உண்டா இல்லையா?

வேங்கடேஸ்வரன் ஹரீஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories