2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

2008ல் உலகமே வீழ்ந்தபொழுது இந்தியா மட்டும் எப்படி எழுந்தது என்பதிற்கு அகிலேஷ் யாதவ் அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார், அது முற்றிலும் உண்மை. அப்போது இந்தியா எழுந்தது இணை பொருளாதாரத்தினால் மட்டுமே.

அது என்ன இணை பொருளாதாரமென்றால் கருப்பு பணத்தினால் ஏற்பட்ட இணை பொருளாதார மேம்பாடுதான் அது.

அது சரியான முன்னேற்றம் அல்ல என்பதிற்கு பல சான்றுகள் உள்ளன, 2008க்கு பிறகான உட்கட்டமைப்பு எந்த அளவிற்கு உயர்ந்தது? உலகம் வீழ்ந்த நிலையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் வாய்ப்பு குறைவே.  நீங்கள் கூறியபடி கச்சா எண்ணை வானளவு. இந்த சூழலில் இந்தியா மட்டும் எழுந்ததிற்கு இந்த நேரம் சரியான காரணமிருந்தால் அதனை கூறியிருக்கலாமே, கடந்த அரசு? ஏன் கூறாமல் அதனை பேச மறுக்கின்றது?

காரணம் என்னவெனில், மொத்த கருப்பு பணமும் வெளி வர ஆரம்பித்தது, இது முதலில் ரியல் எஸ்ட்டேட் மூலம் நாடு முழுவதும் களமிறக்கப்பட்டது.

இதன்மூலம் பல புராஜெக்ட்டுகள் பெயரளவில் போடப்பட்டு, அந்த பகுதியில் இருந்த விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டன. இன்றளவும் ஒவ்வொரு மாநகரத்திலும் 2009ம் ஆண்டு போடப்பட்ட புதிய புராஜெக்ட்டுகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அவை அனைத்துமே இன்று புல் புதர் மண்டிக்கிடக்கின்றது. உடனே இந்த அரசு கைவிட்டுவிட்டது என்று கூறாதீர்கள். 2009ல் இருந்து முழுமையாக 5 ஆண்டுகள் இதே உத்தமர் மன்மோகன் தான் பிரதமர். ஆனாலும் ஒரு திட்டமும் சொன்னபடி வரவில்லை. ஆனால் அந்த புராஜெக்ட்டுகளைக் காரணம் காட்டி அனைத்து இடங்களும் பலமாக விற்றுத்தீர்ந்தது. பல விவசாயிகள் தங்கள் நிலத்தினை விற்று புது பணக்காரர்கள் ஆனார்கள்.

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

இது இந்தியா முழுமையும் நடந்தது. இதற்கு ஏற்ப 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தினைக் கொண்டுவந்து விவசாயம் செய்யமுடியாதபடி திட்டமிட்டு காய் நகர்த்த, நல்ல விலை கிடைக்க ஏன் விவசாயம் என்று பலர் பணத்தினை வாங்கி பணக்காரர்கள் ஆகினர். இதனால் இவர்கள் வாங்கும் திறன் திடீரென அதிகரிக்க..

அடுத்ததாக கட்டுமானத்துறைக்கு இந்த பணம் கைமாறியது, வீட்டில் இருந்து அடுத்தது எப்ஃம்சிஜியில் இந்த பணம் கைமாற, அடுத்தது ஆடம்பரப் பொருட்கள் இப்படி பணம் சுற்ற ஆரம்பிக்க, அந்த நேரமிருந்த ப.சி யும், பொருளாதார மேதை மன்மோகனும் இதனை அமைதியாக வேடிக்கைப் பார்க்க, இந்திய பொருளாதாரமே போலியாக ஏற்றிக்காட்டப்பட்டது.

இதன் விளைவு என்ன தெரியுமா? 2009ல் இந்தியா முழுக்க பல போலி நிதிநிறுவனங்கள் தோன்றி பணம் சூறைவிடப்பட்டது, 30% வட்டி என்று கொள்ளையடித்தனர் பணத்தினை. சாதாரணமாக 4000ம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் எனக்கு சும்மா இருந்தாலே இவ்வளவு பணம் கிடைக்கிறதே நான் ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று யோசிக்கும் அளவிற்கு பணம் பாய்ந்தது.

ALSO READ:  தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

குறைந்த பட்ச சம்பளம் உயர்ந்தது, பல ஜவுளிக்கடல்கள் திடீரென முளைத்தன. இப்படி பல பல நிகழ்வுகள். ஆனால் இப்படி புஸ்ஸென்று கிளம்பிய சோடா பாட்டில் கேஸ், 2012ம் ஆண்டே பொங்கி வடியத் துவங்கியது, வேலை வாய்ப்புத் திண்டாட்டம் 2012லியே ஆரம்பித்து விட்டது. இந்த பொருளாதார மேதைகளின் முட்டாள்தனத்தினால், பண வீக்கம் தாறுமாறாக ஏற, ஒரு கட்டத்தில் ப.சி அப்போதைய ஆர்பிஐ கவர்னரிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்திய ரூபாயின் மதிப்பும் தாறுமாறாக வீழ்ந்தது, வங்கியின் மூலம் இவர்கள் அள்ளித் தெளித்து மக்கள் பணத்தினை சூறையாடியதின் விளைவு வராக்கடன் அதிகரித்தது, இந்திய கையிருப்பு மிகவும் குறைந்தது. உண்டா இல்லையா?

வேங்கடேஸ்வரன் ஹரீஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories