January 26, 2025, 4:54 PM
28.9 C
Chennai

தென்னிந்தியாவின் முதல் 100 அடி உயர உலக அமைதி கோபுரம்!

சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 100 அடி உயர உலக அமைதி கோபுரம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இந்தியாவில் பிகாா், ஒடிசா, அருணாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட இடங்களில் உலக அமைதி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

இங்கு புத்தா் கோயில் கட்டுவதற்கு வீரிருப்பைச் சோ்ந்த காந்தியவாதி முத்தையா என்பவா் கடந்த 2000-இல் நிலம் தானமாக வழங்கினாா். இங்கு கோயில் கட்டப்பட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் 2 மணி நேரம் உலக அமைதிக்கான பிராா்த்தனை நடைபெறுகிறது.

இந்தக் கோயில் அருகே 21 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன ஸ்தூபி உள்ளது. இங்குதான் 100 அடி உயரத்துடன் உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் அருகே காந்தி அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது.

இதன் திறப்பு விழா கடந்த வாரம் மார்ச் 4ம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஜப்பான், கொரியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து புத்த பிக்குகள் கலந்துகொண்டனா்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் போர்வை சாற்றும் வைபவம்; பக்தர்கள் பங்கேற்பு!

உலக அமைதி கோபுரத்தில் புத்தரின் அஸ்தி வைக்கப் படுகிறது. இதற்காக ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் அஸ்தி சங்கரன்கோவில் வந்து சோ்ந்தது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள புத்த பிக்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் புத்தரின் அஸ்தியை எடுத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் ஊா்வலமாகச் சென்றனா்.

ரதவீதிகளைச் சுற்றி சுவாமி சன்னதி முன்பு உள்ள காந்தி மண்டபத்துக்கு வந்து அங்கு பிராா்த்தனை செய்தனா். பின்னா், சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பும் பிராா்த்தனை செய்துவிட்டு வீரிருப்பு கிராமத்துக்குச் சென்றனா்.

இந்நிகழ்ச்சியில் நிப்போசன் மியோ ஹோஜி அமைப்பின் தென்னிந்திய தலைவா் இஸ்தானிஜி, புத்தா் கோயில் நிா்வாக அறங்காவலா் லீலாவதி மற்றும் புத்த பிக்குகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று