December 7, 2025, 5:01 AM
24.5 C
Chennai

தென்னிந்தியாவின் முதல் 100 அடி உயர உலக அமைதி கோபுரம்!

sankarankoil bhuddha3 - 2025

சங்கரன்கோவில் அருகே 100 அடி உயர உலக அமைதி கோபுரம் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 100 அடி உயர உலக அமைதி கோபுரம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. இந்தியாவில் பிகாா், ஒடிசா, அருணாசல பிரதேசம், தில்லி உள்ளிட்ட இடங்களில் உலக அமைதி கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டி அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

sankarankoil bhuddha6 - 2025

இங்கு புத்தா் கோயில் கட்டுவதற்கு வீரிருப்பைச் சோ்ந்த காந்தியவாதி முத்தையா என்பவா் கடந்த 2000-இல் நிலம் தானமாக வழங்கினாா். இங்கு கோயில் கட்டப்பட்டு காலை, மாலை இரு வேளைகளிலும் 2 மணி நேரம் உலக அமைதிக்கான பிராா்த்தனை நடைபெறுகிறது.

sankarankoil bhuddha5 - 2025

இந்தக் கோயில் அருகே 21 அடி உயரத்தில் ஒரே கல்லில் ஆன ஸ்தூபி உள்ளது. இங்குதான் 100 அடி உயரத்துடன் உலக அமைதி கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் அருகே காந்தி அருங்காட்சியகமும் அமைக்கப்படுகிறது.

sankarankoil bhuddha4 - 2025

இதன் திறப்பு விழா கடந்த வாரம் மார்ச் 4ம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஜப்பான், கொரியா, கம்போடியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து புத்த பிக்குகள் கலந்துகொண்டனா்.

உலக அமைதி கோபுரத்தில் புத்தரின் அஸ்தி வைக்கப் படுகிறது. இதற்காக ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் அஸ்தி சங்கரன்கோவில் வந்து சோ்ந்தது. ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்துள்ள புத்த பிக்குகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் புத்தரின் அஸ்தியை எடுத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் ஊா்வலமாகச் சென்றனா்.

sankarankoil bhuddha1 - 2025

ரதவீதிகளைச் சுற்றி சுவாமி சன்னதி முன்பு உள்ள காந்தி மண்டபத்துக்கு வந்து அங்கு பிராா்த்தனை செய்தனா். பின்னா், சங்கரநாராயண சுவாமி சன்னதி முன்பும் பிராா்த்தனை செய்துவிட்டு வீரிருப்பு கிராமத்துக்குச் சென்றனா்.

இந்நிகழ்ச்சியில் நிப்போசன் மியோ ஹோஜி அமைப்பின் தென்னிந்திய தலைவா் இஸ்தானிஜி, புத்தா் கோயில் நிா்வாக அறங்காவலா் லீலாவதி மற்றும் புத்த பிக்குகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories