தோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்!

senkottai dosaikkal1 - 2026 செங்கோட்டைக் கல்! – ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை எத்தனை வடிவங்களில் அடி கொடுத்து இப்படி தயார் செய்கிறார்கள்…! அடிக்கும் சுத்தியலும், எரியும் உலையும், செக்கச் சிவந்த உருக்கிய இரும்புக் குழம்பும், சுரீர் என காயும் நீரும்… எத்தனை வருடங்களாகப் பார்த்து வருகிறேன்!

சுத்தியலை எடுத்து ஓங்கி அடிக்க மூன்று புறங்களிலும் நின்று அதனைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கே… உடல் வலு எப்படி இருந்தாக வேண்டும்!?

senkottai dosaikkal3 - 2026

இங்கே இரும்புப் பட்டறைகள் அதிகம்! விதவிதமான இரும்பு சாதனங்கள்… மரக் கதவுக்கு மாட்டும் சட்டம், கீல், கொண்டி… மாட்டு வண்டிக்கான அச்சு, ஆரம், அச்சாணி… வீட்டு உபயோகத்துக்கான நாழி, உழக்கு, தோசைக் கல், தேங்காய் உரிப்பான் என்று… இப்படிப் பலதும் செய்தாலும்… செங்கோட்டைக்கு என்று அமைந்துவிட்ட ஸ்பெஷல் ஐட்டம் – தோசைக்கல்தான்!

நடுவில் கனமாக, ஓரங்களில் லேசாக என்று கல், குழி தோசைக் கல், கைப்பிடியுடன் கூடிய கல் என்று வித விதமாய்! எடைக் கணக்கில்தான் விலை! ஒன்றரை கிலோவில் இருந்து பார்த்தால் நன்றாக இருக்கும். நீண்டநாட்கள் வரும் வகையில்! இன்றும் எங்கள் வீட்டில் உள்ள சேவை நாழி, முக்காலி நாழி எந்த சேதமும் இல்லாமல் நான் பார்த்திருக்க 25 வருடங்களுக்கும் மேல் நன்றாக உள்ளது. தோசைக் கல் ஐந்தாறு வருடங்கள் நன்றாக இருக்கும்.

senkottai dosaikkal2 - 2026

சில வருடங்களுக்கு முன்னர் வரை, என்னிடம் தோசைக்கல் வாங்கிவரச் சொல்லிக் கேட்பவர்களுக்கு இங்கிருந்து வாங்கிக் கொண்டு போய், திருச்சி, சென்னையில் உள்ள உறவுகள்/நட்புகளுக்கு கொடுத்திருக்கிறேன்.

குற்றாலம் சுற்றுலா, சபரிமலை பயணம் என்று இங்கே வருபவர்கள், அப்படியே செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் போது, செங்கோட்டை காவல் நிலையம் கடந்து சற்று தொலைவில் உள்ள இந்தக் கடைகளில் (பட்டறைகளில்) வாங்கிச் செல்லலாம்! சில நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஆர்டர் செய்து வாங்கிச் செல்பவர்களும் உண்டு.

முன்னர் இரும்பு வார்ப்பு இயந்திரங்கள் வராத காலத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழில் இங்கே கொடி கட்டிப் பறந்தது. கேரளத்தில் இருந்து வரும் மக்கள், மரக்கரி, இரும்பு சாதனங்கள், தோசைக்கல், அரிவாள், அரிவாள்மனை, மண்வெட்டி, கடப்பாரை என பலவும் இங்கே உள்ள பட்டறைகளில் இருந்து வாங்கிச் சென்று பயன்படுத்தியுள்ளனர்.

இப்போது வார்ப்பு இயந்திரங்களில் அடித்து விரைவில் தயாரித்து விடுகிறார்கள். இருந்த போதும், இங்கே கைகளில் அடித்து அளவு பார்த்து சின்னச் சின்னதாய் செதுக்கி வாங்கிச் செல்லும் தோசைக்கல்லுக்கு நிகர் வேறு இல்லைதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories