தோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்!

senkottai dosaikkal1 - 2026 செங்கோட்டைக் கல்! – ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள்! அது செங்கோட்டைக்கு தோசைக் கல்!

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி! உருக்கி, அதனை எத்தனை எத்தனை வடிவங்களில் அடி கொடுத்து இப்படி தயார் செய்கிறார்கள்…! அடிக்கும் சுத்தியலும், எரியும் உலையும், செக்கச் சிவந்த உருக்கிய இரும்புக் குழம்பும், சுரீர் என காயும் நீரும்… எத்தனை வருடங்களாகப் பார்த்து வருகிறேன்!

சுத்தியலை எடுத்து ஓங்கி அடிக்க மூன்று புறங்களிலும் நின்று அதனைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கே… உடல் வலு எப்படி இருந்தாக வேண்டும்!?

senkottai dosaikkal3 - 2026

இங்கே இரும்புப் பட்டறைகள் அதிகம்! விதவிதமான இரும்பு சாதனங்கள்… மரக் கதவுக்கு மாட்டும் சட்டம், கீல், கொண்டி… மாட்டு வண்டிக்கான அச்சு, ஆரம், அச்சாணி… வீட்டு உபயோகத்துக்கான நாழி, உழக்கு, தோசைக் கல், தேங்காய் உரிப்பான் என்று… இப்படிப் பலதும் செய்தாலும்… செங்கோட்டைக்கு என்று அமைந்துவிட்ட ஸ்பெஷல் ஐட்டம் – தோசைக்கல்தான்!

நடுவில் கனமாக, ஓரங்களில் லேசாக என்று கல், குழி தோசைக் கல், கைப்பிடியுடன் கூடிய கல் என்று வித விதமாய்! எடைக் கணக்கில்தான் விலை! ஒன்றரை கிலோவில் இருந்து பார்த்தால் நன்றாக இருக்கும். நீண்டநாட்கள் வரும் வகையில்! இன்றும் எங்கள் வீட்டில் உள்ள சேவை நாழி, முக்காலி நாழி எந்த சேதமும் இல்லாமல் நான் பார்த்திருக்க 25 வருடங்களுக்கும் மேல் நன்றாக உள்ளது. தோசைக் கல் ஐந்தாறு வருடங்கள் நன்றாக இருக்கும்.

senkottai dosaikkal2 - 2026

சில வருடங்களுக்கு முன்னர் வரை, என்னிடம் தோசைக்கல் வாங்கிவரச் சொல்லிக் கேட்பவர்களுக்கு இங்கிருந்து வாங்கிக் கொண்டு போய், திருச்சி, சென்னையில் உள்ள உறவுகள்/நட்புகளுக்கு கொடுத்திருக்கிறேன்.

குற்றாலம் சுற்றுலா, சபரிமலை பயணம் என்று இங்கே வருபவர்கள், அப்படியே செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் போது, செங்கோட்டை காவல் நிலையம் கடந்து சற்று தொலைவில் உள்ள இந்தக் கடைகளில் (பட்டறைகளில்) வாங்கிச் செல்லலாம்! சில நாட்கள் கால அவகாசம் கொடுத்து ஆர்டர் செய்து வாங்கிச் செல்பவர்களும் உண்டு.

முன்னர் இரும்பு வார்ப்பு இயந்திரங்கள் வராத காலத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழில் இங்கே கொடி கட்டிப் பறந்தது. கேரளத்தில் இருந்து வரும் மக்கள், மரக்கரி, இரும்பு சாதனங்கள், தோசைக்கல், அரிவாள், அரிவாள்மனை, மண்வெட்டி, கடப்பாரை என பலவும் இங்கே உள்ள பட்டறைகளில் இருந்து வாங்கிச் சென்று பயன்படுத்தியுள்ளனர்.

இப்போது வார்ப்பு இயந்திரங்களில் அடித்து விரைவில் தயாரித்து விடுகிறார்கள். இருந்த போதும், இங்கே கைகளில் அடித்து அளவு பார்த்து சின்னச் சின்னதாய் செதுக்கி வாங்கிச் செல்லும் தோசைக்கல்லுக்கு நிகர் வேறு இல்லைதான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories