January 23, 2025, 7:00 AM
23.2 C
Chennai

வெட்டப்பட்ட இலங்கை அதிபரின் சகோதரர் பிரியந்த சிறீசேன மரணம்

priyantha-sirisenaகோடாலியால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடி சிகிச்சை பெற்று வந்த இலங்கை அதிபர் மைதரீபால சிறீசேனவின் சகோதரர் பிரியந்த சிறீசேன இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையின் பொலன்னறுவ பகுதியில் ஒரு நபரால் கோடாலியால் வெட்டப்பட்டார் பிரியந்த சிறிசேன. படுகாயமடைந்த அவர் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன தற்போது சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இலங்கைக்கு நாளைதான் திரும்புகிறார். இதனால் நாளை மறுநாள் பொலன்னறுவவில் பிரியந்த சிறீசேனவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரியந்த சிறீசேனவைத் தாக்கிவிட்டு, பின்னர் சரணடைந்த நபரை ஏப்ரல் 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  IND Vs AUS Test: விராட் கோலி சதம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.