பாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் துணை விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வீட்டில் சோதனை நடத்தியபோது அவருக்கு இருந்த பிரச்னை இருந்துள்ளது தெரிய வந்தது. லுபிட்ஸுக்கு கண் நோய் இருந்த விஷயத்தை அவர் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார். அந்த நோய்க்காக அவர் டுசல்டார்ப் நகரில் உள்ள யுனிக்லினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், இந்த விமான விபத்து குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.
விபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari