கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகாரி வெளியிட்ட பகீர் தகவல்! கூடவே வாழ பழகிக்கணுமோ?!

who mike ryon - 2026

உலகை உலுக்கிய எய்ட்ஸ் போன்று… கொரோனா வைரஸும் நீண்ட காலம் இருக்கலாம் என்றும், ஒருபோதும் அழியாமலும் போகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மனித உயிர்களை கொத்துக் கொத்தாக காவு வாங்கி வருகிறது. இந்த மனிதப் பேரழிவை எதிர்கொள்ள வழி தெரியாமல், தொடர் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்து, பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதனால், உலகம் முழுதுமே தொழில்கள் முடங்கி உலக பொருளாதாரம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. ஊரடங்கைத் தளர்த்தி பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தவும், இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உலக நாடுகள் போராடி வருகின்றன.

இத்தகைய நடப்புகளைப் பார்த்துவிட்டு, கொரோனா வைரஸின் தாக்கம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றே அறிஞர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட நிர்வாக இயக்குநர் மைக்ரயான் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், தடுப்பு மருந்து இன்றி, உலக மக்களுக்கு போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆண்டுகள் பல ஆகலாம். ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த பெரும் முயற்சி தேவைப்படும். போதுமான அளவு உற்பத்தி செய்வதற்கும், அவற்றை உலக அளவில் விநியோகிப்பதற்கும் தீவிர முயற்சி தேவைப்படும்.

corona virus

எனவே நீண்ட காலம் இந்த வைரஸ் நம்முடன் இருக்கக்கூடும். நம்மிடையே ஒவ்வோர் ஆண்டும் பரவி வரும் வைரஸ்களில் ஒன்றாகவும் கொரோனா வைரஸ் மாறக் கூடும். இது முற்றிலும் அழியக் கூடிய நிலையை அடையாமலும் இருக்கக் கூடும். எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரஸ் முற்றிலும் அழிக்கப்படவில்லை. ஆயினும் அந்த வைரஸை கட்டுப்படுத்தும் வழிகளை நாம் கண்டறிந்து விட்டோம்.

அதுபோல், கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்பதை கணிப்பதையும் நம்ப முடியவில்லை. அதைக் கட்டுப் படுத்தும் வழிகளைக் கண்டறிந்து வாழவும் முயற்சிகள் மேற்கொள்ளப் படலாம்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Topics

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Entertainment News

Popular Categories