April 27, 2025, 2:42 AM
29.6 C
Chennai

புற்றுநோய் பரவுவதாக வழக்குகள்: யு.எஸ்.ஸில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தும் ஜான்சன் அன் ஜான்சன்!

johnson and johnson baby powder

ஹெல்த்கேர் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தனது ஜான்சனின் பேபி பவுடரை அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்பனை செய்வதை நிறுத்த உள்ளது.

ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடர் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தியதாகக் கூறி, நுகர்வோரிடமிருந்து பல ஆயிரம் வழக்குகளை எதிர் கொண்டிருக் கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் பில்லியன் கணக்கான டாலர்கள் நுகர்வோருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிறுவனம் தனது டால்க் பவுடர் தயாரிப்புகளின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதி செய்து வருகிறது.

ஜான்சன் அண்ட் ஜான்சன், அதன் அமெரிக்க சுகாதார நுகர்பொருள் வணிகத்தில் சுமார் 0.5% வரையான தயாரிப்புகளின் விற்பனையை எதிர்வரும் மாதங்களில் நிறுத்திவிடுவதாகக் கூறியுள்ளது! இருப்பினும், சில்லறை விற்பனையாளர்கள் தொடர்ந்து தங்கள் வசம் இருக்கும் சரக்குகளை விற்பனை செய்வார்களாம்.

இந்த நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகள் மூலம் வந்ததாக கூறப்பட்ட புற்றுநோய் ஏற்படுத்தும் அஸ்பெஸ்டோஸ் தொடர்பில், இந்த நிறுவனத்தைக் குற்றம் சாட்டி 16,000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் வழக்குகளை இது எதிர்கொண்டிருக்கிறது.

ஜான்சனின் பேபி பவுடருக்கான தேவை வட அமெரிக்காவில் குறைந்து வருவதாக நிறுவனம் கூறியுள்ளது! “நுகர்வோர் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உற்பத்தியின் பாதுகாப்பைப் பற்றிய தவறான தகவல்களால் இவ்வாறு முடிவு எடுக்கத் தூண்டப்பட்டதாக அது கூறுகிறது. மேலும், தங்கள் நிறுவனம் மீது வழக்குகளைத் தொடர வாடிக்கையாளர்களுக்காக வக்கீல்கள் விளம்பரம் செய்து வந்ததையும் தாங்கள் எதிர்கொண்டதாக அது கூறியுள்ளது.

ALSO READ:  கரூர்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா; விழிப்புணர்வு பிரச்சாரம்!

மேலும், “டால்க் பவுடன் அடிப்படையிலான ஜான்சனின் பேபி பவுடரின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம். உலகெங்கிலும் உள்ள மருத்துவ நிபுணர்கள் பல பத்தாண்டுகளாக அறிவியல் ஆய்வுகள் மூலம் எங்கள் தயாரிப்பின் பாதுகாப்பை ஆதரித்துள்ளனர்” என்று அது கூறியது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது பாதிக்கப் பட்டுள்ள அதன் நுகர்வோர் தயாரிப்புகளை மறு மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக ஜான்சன் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த அக்டோபரில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த பவுடரில் ஆஸ்பெஸ்டோஸ் (கல்நார்) இல்லை என்று அது கூறியுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் தங்களுக்கு ஓவரியன் கேன்சர் (சினைமுட்டை புற்றுநோய்) ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்த 22 பெண்களுக்கு இழப்பீடாக 4.7 பில்லியன் டாலர் (3.6 பில்லியன் யூரோ) செலுத்த வேண்டும் என்ற 2018 ஆம் ஆண்டின் தீர்ப்புகளுக்கு எதிராக இந்த நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கிறது.

ALSO READ:  கெட்அவுட்ஸ்டாலின் #GetOutStalin - அண்ணாமலை தொடங்கி வைதத சமூகத்தளப் போர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

Entertainment News

Popular Categories