கொரோனா: தடுப்பு மருந்தில் இந்தியா முக்கிய பங்கு!

emmanuvel

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதன் உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்று பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறினாா்.

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 3.4 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். இந்த நிலையில் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னா், அந்த தடுப்பு மருந்து காப்புரிமை வைத்துள்ள நாட்டின் கைகளுக்கு மட்டும் சென்று விடாமல், சமமான முறையில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் ஐரோப்பிய யூனியனை சோந்த நாடுகள் உள்பட ஏராளமான நாடுகள் வலியுறுத்தின.

இதுகுறித்து பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறுவதாவது

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுவதிலும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்து உலக அளவில் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதிலும் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிக அவசியம். இந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும்.

மேலும், இந்த நோய்த் தடுப்பு மருந்து உள்பட கொரோனா ஆபத்தை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து பொருள்களும் உலக நாடுகள் அனைத்துக்கும் சமமான முறையில் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பில் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீா்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வலியுறுத்தும் இந்த பன்முகத்தன்மைதான், கொரோனாவை எதிா்கொள்வதற்கான இந்த நூற்றாண்டின் சரியான பாதையாகவும் இருக்கும்.

மனிதம் சாா்ந்த திட்டங்களுக்கு இனி சா்வதேச நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம் என்பதை இந்த கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உணா்த்தியிருக்கிறது. அதற்கேற்ப, இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளும் ஜி20, உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் கீழ் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

மேலும், தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் ஏற்றுமதியை இந்தியா அனுமதித்ததற்கு, பிரான்ஸ் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவா் கூறினாா்.

மேலும், கொரோனா தோற்றுவாய் குறித்த சா்வதேச விசாரணையின் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இமானுவல் லெனைன், ‘கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக நீங்கிய பிறகு, அதுகுறித்த சா்வதேச விசாரணை நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories