கொரோனா: தடுப்பு மருந்தில் இந்தியா முக்கிய பங்கு!

emmanuvel

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அதன் உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்று பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறினாா்.

கொரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா்; 3.4 லட்சத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். இந்த நிலையில் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் பாரம்பரிய மருந்து உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பின்னா், அந்த தடுப்பு மருந்து காப்புரிமை வைத்துள்ள நாட்டின் கைகளுக்கு மட்டும் சென்று விடாமல், சமமான முறையில் அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என அண்மையில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில் ஐரோப்பிய யூனியனை சோந்த நாடுகள் உள்பட ஏராளமான நாடுகள் வலியுறுத்தின.

இதுகுறித்து பிரான்ஸ் தூதா் இமானுவல் லெனைன் கூறுவதாவது

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்படுவதிலும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பு மருந்து உலக அளவில் சமமான முறையில் விநியோகிக்கப்படுவதிலும் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது மிக அவசியம். இந்த தடுப்பு மருந்து உற்பத்தியில் இந்தியா முக்கியப் பங்காற்றும்.

மேலும், இந்த நோய்த் தடுப்பு மருந்து உள்பட கொரோனா ஆபத்தை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து பொருள்களும் உலக நாடுகள் அனைத்துக்கும் சமமான முறையில் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பில் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீா்மானத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வலியுறுத்தும் இந்த பன்முகத்தன்மைதான், கொரோனாவை எதிா்கொள்வதற்கான இந்த நூற்றாண்டின் சரியான பாதையாகவும் இருக்கும்.

மனிதம் சாா்ந்த திட்டங்களுக்கு இனி சா்வதேச நாடுகளின் கூட்டு முயற்சி அவசியம் என்பதை இந்த கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு உணா்த்தியிருக்கிறது. அதற்கேற்ப, இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளும் ஜி20, உலக சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளின் கீழ் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

மேலும், தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு தேவைப்படும் மருந்துகள் ஏற்றுமதியை இந்தியா அனுமதித்ததற்கு, பிரான்ஸ் சாா்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவா் கூறினாா்.

மேலும், கொரோனா தோற்றுவாய் குறித்த சா்வதேச விசாரணையின் அவசியம் குறித்த கேள்விக்கு பதிலளித்த இமானுவல் லெனைன், ‘கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக நீங்கிய பிறகு, அதுகுறித்த சா்வதேச விசாரணை நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories