இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப தொடர்பான ஒப்பந்தம்! அமெரிக்கா முடிவு!

us

இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்படுவது, போர் விமானத் தயாரிப்பில் உதவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையைச் சேர்ந்த, மார்க் வார்னர் மற்றும் ஜான் கார்னின், தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் திருத்தம் செய்யும், சில தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மார்க் வார்னர், சபையின் உளவுத் துறைக்கான நிலைக் குழு துணைத் தலைவராக உள்ளார்.

ஜான் கார்னின், குடியரசு கட்சியின் கொறடாவாக உள்ளார். மேலும், பார்லி.,யின் இந்திய விவகாரங்களுக்கான குழுவிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளனர். தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதற்காக, இவர்கள் தாக்கல் செய்துள்ள தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா – இஸ்ரேல் இடையே உள்ளது போல், இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

இது குறித்து, ராணுவ அமைச்சர், மார்க் எஸ்பர் விளக்கம் அளிக்க வேண்டும்.ராணுவம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் மற்றும் தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, இரு நாடுகளுக்கு இடையே நிபுணர்களை பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்து, ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தியாவின் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். இந்தியா, தற்போது, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சுயமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தில், அமெரிக்கா உதவுவது குறித்து ஆராய வேண்டும்.

ராணுவ ஒத்துழைப்புக்கான, ‘நேட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பில், இஸ்ரேல், நியூசிலாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளது போல், இந்தியாவையும் சேர்க்க வேண்டும்.அதன் மூலம், அமெரிக்காவின் உயர் ராணுவ தொழில்நுட்பங்கள், ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு செனட் உறுப்பினரான, ஜான் சுலிவான் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘இந்தியாவின் ராணுவ பலத்தை உயர்த்தும் வகையில், அதனுடன் அதிக அளவில் போர் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.’போர் விமானங்கள் தயாரிப்பது உள்ளிட்டவற்றில், அதிக ஒத்துழைப்பு தர வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.செனட் சபையைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான, கோரி கார்ட்னர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், ‘சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories