ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மும்பையில் காலமானார்!

dean-jones
dean-jones

ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மும்பையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார். ஜோன்ஸ் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் குழுவில் இருந்தார், மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் பயோ செக்யுர் பப்புளில் இருந்தார்.

டீன் ஜோன்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 குறித்து வர்ணனை செய்ய கையெழுத்திட்டிருந்தார் .

ஜோன்ஸ் இந்திய ஊடகங்களில் பிரபலமான நபர். அவரது நிகழ்ச்சி ‘பேராசிரியர் டீனோ’ என்டிடிவியில் மிகவும் பிரபலமாக இருந்தது. உலகின் பல்வேறு லீக் போட்டிகள் குறித்து வர்ணனைகள் செய்துள்ளார். அவரது நேர்மையான கருத்துக்களுக்காக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.

மெல்போர்னில் பிறந்த டீன் ஜோன்ஸ் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 46.55 சராசரியாக 3631 ரன்கள் எடுத்தார். 216 ரன்கள் எடுத்த நிலையில், ஜோன்ஸ் 11 சதங்களை அடித்தார் மற்றும் ஆலன் பார்டர் அணியின் முக்கியமான நபராக இருந்தார்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஜோன்ஸ் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதங்கள் மற்றும் 46 அரைசதங்களின் உதவியுடன் 6068 ரன்கள் எடுத்தார்.

ஸ்டார் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “திரு. டீன் மெர்வின் ஜோன்ஸ் ஏ.எம். காலமானார் என்ற செய்தியை நாங்கள் வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் திடீரென இதய நோயால் பாதிக்கப் பட்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க தயாராக நிற்கவும், தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய தூதரகத்துடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்…. என்று தெரிவித்துள்ளது.

” ஒரு சகா மற்றும் அன்பான நண்பர் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்று இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி “அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வலிமை மற்றும் மனதிடம் வர பிரார்த்தனை செய்வதாகத் தெரிவித்திருந்தார்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் ட்விட்டரில் தன் வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். “டீன் ஜோன்ஸ் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது, இன்னும் அதை நம்ப முடியவில்லை. எனக்கு பிடித்த வர்ணனையாளர்களில் ஒருவராக இருந்த அவர், எனது பல சாதனைகளை துல்லியமாக வர்ணனை செய்துள்ளார். அவருடன் உண்மையிலேயே நினைவுகளை வைத்துள்ளேன், அவரை இழந்துள்ளேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தொடர்ச்சியான ட்வீட்களில், ” இல்லை, டீனோ. இல்லை. நான் வாயடைத்துப் போய் இருக்கிறேன், அதிர்ச்சியில் இருக்கிறேன், இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ஐபிஎல்க்காக தற்போது மும்பையில் இருந்துவந்த டீன் ஜோன்ஸ் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து அனைவருக்கும் பதிலளித்து வந்தார். அவரது மறைவால், கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் 24 மார்ச் 1961 ல் பிறந்த டீன் ஜோன்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக ரெக்கார்டுகள் சாதித்துள்ளார்.

ஐபிஎல் 2020 க்காக தற்போது மும்பையில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டீமோடு உள்ள டீன் ஜோன்ஸ் சோஷல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்தார். நேற்று நடந்த மேட்ச் க்கு பிறகு கூட ஒரு ரசிகர் ஆவேசமாக திட்டி செய்த போஸ்ட்க்கு கூட மிகவும் கூலாக பதில் அளித்தார் டீன் ஜோன்ஸ்.

பெஸ்ட் ஒன் டே பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்பட்ட டீன் ஜோன்ஸ் செப்டம்பர் 24 இன்று மதியம் கூட மிகவும் நார்மலாகவே காணப்பட்டார். ஆபீசுக்கு வந்து அனைவரோடும் உரையாடினார். டீன் ஜோன்ஸ் திடீரென்று மயக்கமடைந்து விட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கிரிக்கெட் கோச் ஆகக் கூட இருந்த டீன் ஜோன்ஸ் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் டீம் 2016 ல் டைட்டில் வென்றதில் முக்கிய பங்கு வகித்தார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் டீமுக்குக் கூட கோச்சாக சேவைகள் அளித்த டுன் ஜோன்ஸ் பிசிஎல் லில் கராச்சி கிங்ஸ் டீமுக்கு ஹெட் கோச் ஆக பிஸியாக இருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories