December 5, 2025, 12:05 PM
26.9 C
Chennai

இன்று… உலகம் உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல்!

trump-vs-joe-biden
trump-vs-joe-biden

உலகமே உற்று நோக்குகின்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா கொடூரங்களுக்கு இடையே, கடுமையான பிரசாரங்கள் மூலம் அமெரிக்காவை கலக்கி வந்த டிரம்ப்- ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுவதால், அமெரிக்கர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர் ட்ரம்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடனுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குகிறது.

trump
trump

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர், வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக பதவியேற்பார். தேர்தல் தினம் இன்று தான் என்றாலும் பல மாகாணங்களில் ஏற்கெனவே, வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 கோடியே 50 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

முன்கூட்டியே வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் ஜோ பிடனை ஆதரிக்கும் ஜனநாயகக் கட்சியினர் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், நேரடி வாக்குப் பதிவில் தற்போதைய அதிபர் ட்ரம்புக்கு அதிக ஆதரவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

எனினும், கடைசி நிமிட வாக்காளர் கருத்துக் கணிப்புகள் 8 சதவீத வாக்குகளுடன் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறுகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் தேர்தலை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப் போவதாக வடக்கு கரோலினாவில் பிரச்சாரத்தின்போது டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் மறைமுக தேர்தல் முறையைச் சேர்ந்தது. மாநிலங்களில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்வு குழுவினர் கட்சி அடிப்படையில் அளிக்கப்படும் பெரும்பான்மை வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்

மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் தவிர 48 மாநிலங்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் வகையில்தான் வாக்களிப்பது அமெரிக்க மரபாக இருந்து வந்துள்ளது. மொத்தம் 538 பேர் 50 மாநிலங்களில் இருந்து தேர்வு குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த 538 பேரில் எந்த கட்சி வேட்பாளருக்கு கூடுதல் ஆதரவு உள்ளதோ அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப் படுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் உடன் அமெரிக்க பிரதி நிதிகள் சபைக்கு 435 இடங்களுக்கு தேர்தல் நடக்கும். 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும். 11 மாநில ஆளுநர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மற்றும் பல மாநில அரசு பிரதிநிதிகளும் இந்தத் தேர்தலுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories