December 6, 2025, 5:52 AM
24.9 C
Chennai

தாயை 90 முறைக்குத்தி தலையை வெட்டி வெளியே வீசிய மகள்!

murder-1
murder-1

ஆஸ்திரேலியாவில் பெற்ற தாயை 90 முறை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளம்பெண்ணிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 57 வயதுடைய ரீட்டா காமிலெரி என்ற பெண் கடந்த 2019 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் ரீட்டா காமிலெரியின் மகள் ஜெசிகா காமிலெரியை(27) கைது செய்துள்ளனர். அப்போது அவரின் உடல் முழுக்க ரத்தம் வழிந்துள்ளது.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், ஜெசிக்காவிற்கு 21 வருடங்கள் மற்றும் 7 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் விசாரணையில் ஜெசிகா, தன் தாயார் தன்னை உளவியல் சிகிச்சைக்கு அனுப்ப முயன்றதால் கொடூர தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் சமயலறையிலிருந்த 7 கத்திகளை பயன்படுத்தி தன் தாயின் உடல் முழுவதும் சுமார் 90 முறை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன் பின்பு, அவரின் தலையை துண்டித்ததோடு ரத்தம் வழிய வீட்டிற்கு வெளியில் கொண்டு சென்று நடைபாதையில் வீசியிருக்கிறார்.

அதன் பின்பு அவரே காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். மேலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் முதலில் பேசிய அவர் அதன் பிறகு தற்காப்புக்காகதான் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரேத பரிசோதனையில் ரீட்டா காமிலெரியின் உடலில் சுமார் 100 முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான காயங்கள் இருந்துள்ளது.

இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஜெசிகாவின் வாதங்களை எதனையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. எனினும் ஜெசிகா உளவியல் ரீதியான பாதிப்பு அடைந்தவர் என்பது மட்டும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories