பீஜிங்: தற்போதுள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கண்ட பின்னர் கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடரும் என்று சீன அதிபரிடம் சிறீசேன உறுதி கூறியுள்ளார். ராஜபட்ச அதிபராக இருந்தபோது, கொழும்பு துறைமுக நகர்த் திட்டத்தை 1.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் நிறைவேற்ற சீனாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தத் திட்டத்தை கடந்த 2014ல் சீன அதிபர் ஜின் பிங், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே தொடங்கி வைத்தார். ஆனால் தற்போது அதிபராக சிறீசேன பதவி ஏற்ற பின்னர், கொழும்பு துறைமுக நகர் திட்டத்துக்கு முறையான ஒப்புதலைப் பெறவில்லை என கூறி திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும், ‘ உள்நாட்டு சட்ட விதிகளின்படிதான் இந்தத் திட்டப் பணிகள் நடைபெற்றன; இது ரத்து செய்யப்பட்டால், அது வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுத்து விடும்’ என்று சீனா கூறியது. இந்நிலையில் இலங்கை அதிபர் சிறீசேன, சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் பீஜிங்கில் அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியபோது, “கொழும்பு துறைமுக நகர் திட்ட பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு கண்ட பின் பணிகள் மீண்டும் தொடரும்” என்று உறுதி அளித்தார். இத்தகவலை பீஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரி நேற்று வெளியிட்டார்.
சுமுகத் தீர்வு கண்டபின் கொழும்பு துறைமுக நகர் திட்டம் தொடரும்: சீன அதிபரிடம் சிறீசேன உறுதி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

