December 6, 2025, 4:15 AM
24.9 C
Chennai

மருத்துவ அதிசயம்! மூளைச்சாவு அடைந்த தம்பியை 1,2,3 சொல்லி எழுப்பிய அக்கா!

Lewis1 - 2025

மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்ட இளைஞர் மீண்டும் உயிர்பெற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 18 வயது இளைஞர் Lewis Roberts. இவர் கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். அந்த விபத்தில் Lewis ராபர்ட்ஸ்ன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அந்த இளைஞரின் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளன்னர். இதையடுத்து 4 நாட்கள் Lewis மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததை அடுத்து, மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

Lewis2 - 2025

இதற்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, உடல் உறுப்புகளை எடுப்பதற்க்கான அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தயாராகியுள்ளனர். இந்நிலையில் Lewisயின் மீது அளவு கடந்த பாசம் கொண்ட அவரின் அக்கா Jade Robert என்பவர், ICUயில் இருக்கும் தனது தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டு அவரது கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்கப் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

இதுதான் தான் கடைசியாக தனது தம்பியிடம் பேசுவது என நினைத்துக்கொண்டு, தம்பி, நான் ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்வேன். உடனே நீ சுவாசிக்க வேண்டும் எனத் தனது மனதில் தோன்றியதைக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அறுவை சிகிச்சை செய்து உடலுறுப்புகளை எடுப்பதற்காக Lewis சை அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவர்கள் உள்ளே வந்துள்ளனர். தனது தம்பி தன் கண் முன்னாடியே மரணமடைய போவதை நினைத்த அவரது அக்கா, உடனே ஒன்று, இரண்டு, மூன்று எனச் சொல்லியுள்ளார்.

Lewis - 2025

இதனை கேட்டதும் Lewis மூச்சு விட தொடங்கியுள்ளார். மேலும் அவர் கண்சிமிட்டவும் செய்துள்ளார். இதனை பார்த்ததும் மருத்துவர்கள் ஒருநிமிடம் ஆடிப்போனார்கள். மூளைச்சாவு அடைந்த அந்த இளைஞர் தற்போது தானாக சுவாசிப்பதும், கண்சிமிட்டுவதும் அவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.

உடனே அறுவை சிகிச்சை வேலைகளை நிறுத்திவிட்டு அந்த இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது அந்த இளைஞர் கால்களை அசைக்கவும், தலையை அசைக்கவும், கண்ணிமைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.

ஏறக்குறைய இறந்துவிட்டதாக கருதப்பட்ட இளைஞர், சினிமாவில் வருவதுபோல் 1 , 2 , 3 சொன்னதும் உயிருடன் வந்தது அவரது குடும்பத்தினர் தொடங்கி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories