திருமணத்திற்கு மறுத்த மகன்! துண்டாக்கி சூட்கேஸில் தூக்கி எறிந்த பெற்றோர்!

Babak Haromdin
Babak Haromdin

சினிமா டைரக்டரை பெற்றோரே கொலை செய்து சூட்கேசில் அடைந்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாபக் ஹரோம்தின், ஈரான் தெஹ்ரான் நகரத்தில் வாழ்ந்து வந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில் சினிமா தொடர்பான பட்டப்படிப்பு முடித்து விட்டு இங்கிலாந்து நாட்டின் லண்டனில் மேற்படிப்பு முடித்துள்ளார்.

இதனையடுத்து, டைரக்டராக வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இங்கிலாந்திலேயே தங்கி குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் டைரக்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த அவரது பெற்றோர், யாராவது ஒருபெண்ணை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து தொலைபேசி மூலம் பாபக் ஹரோம்தினை வலியுறுத்தி வந்துள்ளனர்.

ஆனால், அவர் இதை கொஞ்சம் கூட பொருட்ப்படுத்தவில்லை. இதற்கிடையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாபக் ஹரோம்தின் லண்டனில் இருந்து தனது சொந்த நாடான ஈரான் திரும்பி, தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், பாபக் ஹரோம்தின் சினிமா டைரக்‌ஷன் தொடர்பான ப்ரோடக்ஷன் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

இந்நிலையில், யாரேனும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் படி பாபக்யிடம் அவரது தந்தை கடந்த வாரம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அப்போது, தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பாப்க் ஹரோம்தின் தந்தை, பாப்க் ஹரோம் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

இதனால், அவர் மயக்கமடைந்துள்ளதை அடுத்து, பாப்க் ஹரோம்தின் தந்தை தனது மகனை கத்தியால் குத்தி கவுரவக்கொலை செய்து அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார்.

இந்த கொடூர செயலுக்கு பாப்க் ஹரோம்தின் தாயாரும் உடந்தையாக இருந்து, துண்டுதுண்டாக வெட்டிய தனது மகனின் உடலை சூட்கேஸ் மற்றும் பைகளில் அடைத்து தெஹ்ரானின் அருகில் அமைந்துள்ள எக்படன் என்ற பகுதியில் வீசிச்சென்றுள்ளார்.

துர்நாற்றத்துடன் சூட்கேஸ் மற்றும் பையில் மனித உடல்பாகங்கள் கிடந்தது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு புகார் அளித்தனர்.

அந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சூட்கேசில் இருந்தது பாப்க் ஹரோம்தினின் உடல் என்பதை உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து பாப்க் ஹரோம்தின் தந்தை மற்றும் தாயார் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தனது மகனை கொன்றதை பாப்க் ஹரோம்தினின் தந்தையும், அதற்கு உடந்தையாக இருந்ததை அவரது தாயாரும் ஒப்புக்கொண்டனர். குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories