
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் குரூப் ஏ போட்டியில் வீழ்த்தியது. இந்தியாவுக்காக ஹர்மன்பிரீத் சிங் (26 மற்றும் 33 வது நிமிடங்கள்) இரட்டை கோல் அடித்தார். எட்டு முறை முன்னாள் சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு ரூபீந்தர் பால் சிங் மற்றொரு கோல் அடித்தார்.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை, கேன் ரஸ்ஸல் (6 வது நிமிடம்), ஸ்டீபன் ஜென்னஸ் (43 வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் ஏ குரூப்பில் உள்ளது. பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரிட்டன், கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை குரூப் பி பிரிவில் உள்ளன.
சுஷீலா தேவி ஜூடோ போட்டியில் தோல்வி – ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.

பெண்கள் 48 கிலோ ஜூடோவில் சுஷிலா தேவி – 32 போட்டிகள் கொண்ட முதல் சுற்றில் சுஷிலா தேவி தோல்வியுற்று வெளியேறினார். போட்டியில் முதல் இரண்டு நிமிடங்கள் சுஷீலா சென்ற ஒலிம்பிக்கில் மூன்றம் இடம் பிடித்த வீராங்கனை ஹங்கேரிய வீராங்கனை இவா செசனோவிஸ