தாயின் கள்ளகாதலன்.. தாயுடன் சேர்ந்து கொன்ற மகன்!

murder
murder

திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.

திருப்பூர் போலீசார் அந்த சடலம் தொடர்பான புகைப்படங்களை அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்து, இது குறித்து விசாரிக்கும்படி கூறினார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் கல்லூரி சாலையில் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சந்தோஷ்குமார் என்பவர் கடந்த மூன்று நாட்களாக மாயமானது குறித்து போலீசாருக்கு புகார்கள் வந்தன. சந்தோஷ்குமாரின் சொந்த ஊர் திருவாருர் மாவட்டம் ஆகும்.

இதுபற்றி போலீசார் விசாரணையில் இறங்கியபோது, சந்தோஷ்குமார் மாயமான நாளன்று முருகேஸ்வரி என்பவரின் மகனுடன் வெளியில் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக போலீசார் முருகேஸ்வரி வீட்டுக்கு சென்றனர்.

அப்போது முருகேஸ்வரி மகன் ஆரோக்கிய தாஸுடன் சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உடனடியாக தேனிக்கு விரைந்த போலீசார் முருகேஸ்வரி மற்றும் அவரது மகன் ஆரோக்கிய தாஸ் ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சடலமாக கிடந்த சந்தோஷ்குமாரும், முருகேஸ்வரியும் ஒரே பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கணவர் தேனியில் இருக்கும் நிலையில், மகனுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார் முருகேஸ்வரி. சந்தோஷ்குமார் முருகேஸ்வரிக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சந்தோஷ்குமாருக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட தொடங்கியது. இதனை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட சந்தோஷ்குமார், முருகேஸ்வரியை பாலியல் அடிமையாக கொடுமைப்படுத்த தொடங்கினார்.

ஆரோக்கிய தாஸ் இல்லாத நேரத்தில் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்ற சந்தோஷ்குமார், மது அருந்தி விட்டு முருகேஸ்வரியை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்த தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் கொடுமை அதிகமாக இதற்கு முருகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி தருமாறு சந்தோஷ்குமார் கூறியுள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகேஸ்வரி சந்தோஷ்குமார் தனக்கு செய்த கொடுமைகள் குறித்து மகன் ஆரோக்கிய தாஸிடம் கூறி கண்ணீர் விட்டு கதறிவுள்ளார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இருவரும் சேர்ந்து சந்தோஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி 3 நாட்களுக்கு முன்பு சந்தோஷ்குமார் வீட்டுக்கு சென்ற ஆரோக்கிய தாஸ் அவரை மது அருந்த வருமாறு அழைத்து வந்துள்ளார்.

சந்தோஷ்குமாரை வீட்டுக்கு அழைத்து வந்த ஆரோக்கிய தாஸ் தனது தாய் மற்றும் நண்பர் பாலசுப்பிரமணியனுடன் சேர்ந்து மது போதையில் இருந்த சந்தோஷ்குமாரை சித்தரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அந்த சடலத்தை வீசுவதற்கான இடம் தேடி சடலத்தை இரு சக்கர வாகனத்தில் வைத்து ஊர், ஊராக சுற்றியுள்ளனர்.

இதன் பின்னர்தான் கல்லாங்காடு பாறைக்குழியில் சடலத்தை பாறைக்குழியில் வீசி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து தப்பி சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து முருகேஸ்வரி, ஆரோக்கிய தாஸ் மற்றும் பாலசுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தையே இந்த கொலை அதிர வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories