January 26, 2025, 6:51 AM
22.3 C
Chennai

இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

இலங்கையில் அதிபர் மைத்ரீபால சிறீசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்து வருகின்றன.

இருப்பினும், அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் தோல்வி அடைந்தன. அதிலிருந்து இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ராஜபட்ச தலைமையிலான எஸ்எல்பிபி கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தது. இதற்கு அதிபர் மைத்ரீபால சிறீசேன கட்சியும் ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க  225 உறுப்பினர்களில் 113 பேரின் ஆதரவு இருந்தால் போதுமானது. பிரதமர் ரணில் விக்ரமசிஙவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 உறுப்பினர்கள் ஆதரவு இருந்த நிலையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களின் ஆதரவை ரணிலுக்கு  வழங்குவதாக அறிவித்தது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணில் வெற்றி பெறுவார் என்பது உறுதியானது.

ALSO READ:  என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்!

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று இரவு 10 மணிக்கு நடைபெற்றது. இதில் 122 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். 76 பேர் மட்டுமே தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் 76 எம்பிக்கள் பங்கேற்கவில்லை. எனவே, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விடைந்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று