நூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்!

tamilnesan paper - 2026

நினைவில் நிற்கும் “நேசன்!”-1 : மலேசியாவின் மூத்த நாளேடான தமிழ் நேசன் 2019 ஜனவரி 31ந் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது! 94 ஆண்டுகள் தமிழுக்கு அருஞ் சேவையாற்றிய இதழ் நேசன்.

நவீன, மின்னியக்க வண்ணத் தயாரிப்பாகக் கவரும் விதத்தில் வந்த “நேச”னின் உருவாக்கமே தமிழுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது. ஞாயிறு தோறும் கூடுதல் பக்கங்களுடன் பொலிவுடன் வழங்கப்பட்டு வந்தன. அரசியல், இலக்கியம், ஆன்மீகம், கதை, கட்டுரை, கவிதை, கலை எனப் பல்சுவை அம்சங்களுடன் ஞாயிற்றுப் பதிப்பு திகழும். 

நான் பள்ளி மாணவனாக இருக்கும்போதே எழுத்துத் துறையில் ஈடுபட நேசன் பெரிதும் உறுதுணையாக இருந்தது. 1950களில் மகாத்மா காந்தி, நேதாஜி, பாரதியார் போன்ற தேசத் தலைவர்கள் பற்றிய கட்டுரைகள் எழுதினேன்.

நேசன் நடத்திய கதை வகுப்பில் கவிஞர் கா, பெருமாளும் நானும் கலந்துகொண்டு “தேர்ந்த எழுத்தாளர்கள்” என்ற விருதும் பெற்றோம். இந்த 70 ஆண்டுத் தொடர்பில் நான் எழுதிய ஏராளமான கதைகள், கட்டுரைகள் நேசனில் வெளிவந்திருக்கின்றன. ஒரு விழா எடுத்து எங்களைச் சிறப்பித்தார் டத்தின் இந்திராணி.

இவர்களுடன் துன் எஸ். சாமிவேலு, இவர்கள் மகன் நிர்வாகி எஸ். வேள்பாரி ஆகியோரும் நேசனைப் பல சோதனைகளிலும் சாதனை இதழாக நிறுத்த அரும்பாடு பட்டிருக் கின்றனர். 

இன்னும் ஆறு ஆண்டுகளில் நூற்றாண்டைக் காண இருந்த வேளையில் இந்த மூத்த இதழான நேசனுக்கு நேசக் கரம் கொடுத்து உயர்த்திவிடக் கூடியவர்களைக் காண இயலாது போனதுதான் பேரிடியாகவும் பேரிழப்பாகவும் தமிழ் சமூகத்திற்கே பேரதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது.

பல்வேறு சமூகங்களிடையே கூடி வாழும் தமிழர்கள் மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினர் எனினும் அவர்களின் சாதனைகளால் பெருங்குடி மக்களுக்கு ஈடு கொடுத்து நிற்க முடிகிறது. தகவல் சாதனங்களில் நூறு ஆண்டை எட்டக்கூடிய ஒரு தமிழ் நாள் இதழை நடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தோம் என்பதே ஒரு சாதனைதான்!

நேசன் ஆசிரியர்களாக இருந்த மலையாண்டிச் செட்டியார், ஆதி நாகப்பன், கு. அழகிரிசாமி, முருகு சுப்பிரமணியன், பி. சந்திரகாந்தம் போன்றோரும் இன்னும் பல துணை ஆசிரியர்களும் புகைப்பட, ஓவியர்கள், கணிப்பொறி வித்தகர்கள், விற்பனையாளர்கள் ஆகியோரின் அயரா உழைப்பை நாம் என்றும் மறக்க முடியாது.

singapore sharma - 2026

நேசனின் சகாப்தம் ஒரு நூற்றாண்டை எட்டும் தருவாயில் தடைப்பட்டு நின்று போனாலும் அந்த இழப்பை இருக்கும் நாளிதழ்கள் இன்னும் சிறப்பான சேவையால் ஈடுகட்டும் என எதிர்பார்ப்போம்!

  • சிங்கப்பூர் சர்மா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories