தேடுதலின் போது துப்பாக்கிச் சூடு! வங்கதேசத்தில் ஜமாத் உல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

is poster bengali 1 - 2026

வங்கதேசத் தலைநகர் டாக்காவிற்கு வெளியே முகமத்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திங்கள் கிழமை அதிகாலை அந்நாட்டு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்நாட்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவும் அங்கே சோதனை மேற்கொண்டது.

வீடு ஒன்றினை சுற்றி வளைத்தபோது, பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதை அடுத்து, பாதுகாப்பு படையினர் தொடர் தாக்குதல் தொடுத்துள்ளனர். இதனால் துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது.

இதை அடுத்து, அந்தப் பகுதியில் வசித்த மக்களை அங்கிருந்து அப்புறப் படுத்திவிட்டு, பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து பாதுகாப்புப் படையினர் தீவிர தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தாக்குப் பிடிக்க முடியாத பயங்கரவாதிகள், வேறு வழியின்றி, தாங்கள் வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் அவர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இது குறித்து வங்கதேச சிறப்பு படைப்பிரிவு அதிகாரி பெனசீர் அகமது தெரிவித்த போது, எங்களது வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு சென்று பார்த்தனர். அதில், உயிரிழந்த இருவர் உடல்கள் சிதறிக் கிடந்தன. அவர்கள் யாரென்பதை அடையாளம் காண்பது சிரமம். எனவே, டிஎன்ஏ பரிசோதனைக்குக் கொண்டு சென்றுள்ளோம்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதனால் சுற்றியிருந்த பகுதிகளும் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர், அவருடைய மனைவி, அப்பகுதியில் உள்ள மசூதியின் இமாம் உள்ளிட்ட நான்குபேரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டாக்காவில் 2016-ம் ஆண்டு ஜூலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் 22 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் வெளிநாட்டவர்கள். இதனையடுத்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது வங்கதேச படையினர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நாடு முழுவதும் நடைபெற்ற அதிரடி சோதனைகளில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

திங்கள் இன்று கிடைத்த உளவுத் தகவலை அடுத்து, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பினரை தேடியது போலீச். வங்கதேசத்தில் 1998ல் தனி இஸ்லாமிய நாடு அமைப்பது என்ற முழக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வங்கதேச படையினரின் நடவடிக்கையால் அந்த அமைப்பின் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு, அந்த அமைப்பு வலுவிழக்கச் செய்யப் பட்டது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இதை அடுத்து பெயரை மாற்றி, 2010ல் நியோ ஜமாத் உல் முஜாஹிதீன் என்ற துணை அமைப்பு தொடங்கப்பட்டது. இது அதே இஸ்லாமிக் ஸ்டேட் பங்ளாதேஷ் என்ற கொள்கையை முன்னிறுத்தியது. தொடர்ந்து, ஐஎஸ் அமைப்பின் கிளையாகவே செயல்பட்டது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பை அடுத்து அந்நாடு, நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பு மற்றும் தொடர்புடைய பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அதை அடுத்து வங்கதேசமும் அதே போன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறது !

முன்னதாக, வங்கதேசத்தில், விரைவில் வருவோம் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பின் லோகோவுடன் போஸ்டர் இருந்ததை செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதை அடுத்து, வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Entertainment News

Popular Categories