ஹிந்து ராஜ்ய சுல்தான் இரண்டாம் தேவராயர்! சொல் புதிதல்ல!

vijayanagara empire devaraya ii - 2026

-> சங்கர் நாராயணன்

ஹிந்து என்ற பெயர் அன்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றிய விஜயநகரப் பேரரசின் சக்ரவர்த்திகளில் முக்கியமானவர் இரண்டாம் தேவராய மகாராயர் காலம் பொ.யு 1426 – 1452.

அவரது மெய்கீர்த்தி.
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ
ஸ்ரீமன் மகா மண்டலேசுவர
அரி ராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன்
மூவராய கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
இந்து ராயசுரத்ராண இராசாதி ராசன்
இராச பரமேசுவரன்
பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர
கசவேட்டை கண்டருளிய பிரதாப
இம்மடி தேவராய மகாராயர்

தன்னை “இந்துராய சுரத்ராண” அதாவது ஹிந்து ராஜ்ய சுல்தான் என்று இரண்டாம் தேவராயர் சொல்கிறார். ஆகவே ஹிந்து என்று அரசாங்கமும், அதை ஆளும் அரசரும் சொல்வது ஒன்றும் புதிதல்ல.

Having said that, விஜயநகர அரசர்கள் அத்வைத, ஶ்ரீ வைஷ்ணவ, மாத்வ, சைவ சித்தாந்த, வீரசைவ, ஜைன ஸம்பிரதாயங்களை மதித்து, அந்தந்த ஆச்சார்யர்களைப் போற்றியவர்கள்.
தங்களை ஹிந்து அரசர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் எல்லா ஸம்பிரதாயத்தையும் ஒன்று போல மாற்றுகிறேன் என்று முயலாதவர்கள்.

உண்மையில் அன்று ஹிந்துக்களுக்கு விஜயநகர அரசர்களை விட்டால் வேறு நாதி இல்லை. அப்படியிருந்தும் அந்த ஹிந்து அரசர்கள் நம் சமயத்தை ஒற்றைப்படையாக மாற்ற முயலவில்லை.
இப்படி ஹிந்து என்றால் அனைத்து ஸம்பிரதாயங்களும் தத்தம் தனித்தன்மையோடு தம் வாழ்க்கையையும்,, அதே சமயம் அனைத்து ஸம்பிரதாயங்களுக்கும் பொதுவாக இருக்கும் அடிப்படை விஷயங்களால் இணைந்தும் இயங்கும் என்பதே பாரம்பரியமாக இருந்தது.

இன்று ஹிந்து என்ற பெயரைச் “சிலர்” அனைத்து ஸம்பிரதாயங்களையும் ஒற்றைப்படைத்தன்மையாக மாற்றுவது என்று முயல்வதால், ஹிந்து என்று சொல்வதைச் ஸம்பிரதாயங்களை அனுஷ்டிப்பவர்களில் பலர் எதிர்க்கிறார்கள். ஆம். அப்போது ஹிந்து என்ற சொல் இங்கே பல ஸம்பிரதாயங்களின் தனித்தன்மையைப் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்லத்தான் வேண்டும்.

அதேநேரம் தத்தம் ஸம்பிரதாயங்களில் உறுதியாகவும், அனைத்து ஸம்பிரதாயங்களையும் மதித்து, அவர்கள் தனித்தன்மையைப் பேணி , பொதுவான விஷயங்களில் அனைவரும்.இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கும் பலரும் ஹிந்து என்ற பெயரிலேயே பொதுக்காரியங்களில் அனைவரையும் அணைத்து இயங்குகிறார்கள். இயங்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories