ஹிந்து ராஜ்ய சுல்தான் இரண்டாம் தேவராயர்! சொல் புதிதல்ல!

vijayanagara empire devaraya ii - 2026

-> சங்கர் நாராயணன்

ஹிந்து என்ற பெயர் அன்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம்மைக் காப்பாற்றிய விஜயநகரப் பேரரசின் சக்ரவர்த்திகளில் முக்கியமானவர் இரண்டாம் தேவராய மகாராயர் காலம் பொ.யு 1426 – 1452.

அவரது மெய்கீர்த்தி.
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ
ஸ்ரீமன் மகா மண்டலேசுவர
அரி ராய விபாடன்
பாஷைக்குத் தப்புவராய கண்டன்
மூவராய கண்டன்
கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான்
இந்து ராயசுரத்ராண இராசாதி ராசன்
இராச பரமேசுவரன்
பூர்வ தட்சிண பச்சிம உத்தர
சமுத்ராதிபதி ஸரீவீர
கசவேட்டை கண்டருளிய பிரதாப
இம்மடி தேவராய மகாராயர்

தன்னை “இந்துராய சுரத்ராண” அதாவது ஹிந்து ராஜ்ய சுல்தான் என்று இரண்டாம் தேவராயர் சொல்கிறார். ஆகவே ஹிந்து என்று அரசாங்கமும், அதை ஆளும் அரசரும் சொல்வது ஒன்றும் புதிதல்ல.

Having said that, விஜயநகர அரசர்கள் அத்வைத, ஶ்ரீ வைஷ்ணவ, மாத்வ, சைவ சித்தாந்த, வீரசைவ, ஜைன ஸம்பிரதாயங்களை மதித்து, அந்தந்த ஆச்சார்யர்களைப் போற்றியவர்கள்.
தங்களை ஹிந்து அரசர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் எல்லா ஸம்பிரதாயத்தையும் ஒன்று போல மாற்றுகிறேன் என்று முயலாதவர்கள்.

உண்மையில் அன்று ஹிந்துக்களுக்கு விஜயநகர அரசர்களை விட்டால் வேறு நாதி இல்லை. அப்படியிருந்தும் அந்த ஹிந்து அரசர்கள் நம் சமயத்தை ஒற்றைப்படையாக மாற்ற முயலவில்லை.
இப்படி ஹிந்து என்றால் அனைத்து ஸம்பிரதாயங்களும் தத்தம் தனித்தன்மையோடு தம் வாழ்க்கையையும்,, அதே சமயம் அனைத்து ஸம்பிரதாயங்களுக்கும் பொதுவாக இருக்கும் அடிப்படை விஷயங்களால் இணைந்தும் இயங்கும் என்பதே பாரம்பரியமாக இருந்தது.

இன்று ஹிந்து என்ற பெயரைச் “சிலர்” அனைத்து ஸம்பிரதாயங்களையும் ஒற்றைப்படைத்தன்மையாக மாற்றுவது என்று முயல்வதால், ஹிந்து என்று சொல்வதைச் ஸம்பிரதாயங்களை அனுஷ்டிப்பவர்களில் பலர் எதிர்க்கிறார்கள். ஆம். அப்போது ஹிந்து என்ற சொல் இங்கே பல ஸம்பிரதாயங்களின் தனித்தன்மையைப் பேணுவதாக இருக்க வேண்டும் என்பதை உரக்கச் சொல்லத்தான் வேண்டும்.

அதேநேரம் தத்தம் ஸம்பிரதாயங்களில் உறுதியாகவும், அனைத்து ஸம்பிரதாயங்களையும் மதித்து, அவர்கள் தனித்தன்மையைப் பேணி , பொதுவான விஷயங்களில் அனைவரும்.இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைக்கும் பலரும் ஹிந்து என்ற பெயரிலேயே பொதுக்காரியங்களில் அனைவரையும் அணைத்து இயங்குகிறார்கள். இயங்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories