
பிரமாண்ட இந்திய முன்னெடுப்புகள்!
பாரதப் பிரதமராக திரு நரேந்திர மோடியின் இந்த மூன்றாவது பதவி காலத்தில் யாராலும் கற்பனை செய்ய இயலாத விஷயங்களை முன்னெடுத்து வருகின்றார் அவர்.
தனது ராஜதந்திர ராஜாங்கம் மூலம் ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே கடிவாளம் போட நினைக்கிறார். டாலர் தேசத்தின் மூக்கனாங்கயிறு நம் இந்திய தேசத்திடம் வர இருக்கிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து அவர் இந்திய நலனை தாண்டி, தன் நலன் கருதி மிக சாதுர்யமாக காய் நகர்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் நம் தேசத்தை கொண்டு வர எத்தனிக்க… நம் இந்திய தரப்பில் ஆரம்ப காலத்தில் திணறினாலும் சமாளித்து கொண்டு எதிர் வினையாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
இது இவ்வாண்டு பட்ஜெட்டில் நன்றாக வெளிப்பட்டது. அமெரிக்க அதிபராக அவரது முன்னெடுப்புகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப வரி வருவாய் இனங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. ஆன போதிலும் ட்ரம்ப் விடாப்பிடியாக உணவு பொருட்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட FMCG பிராடக்டிற்கு இந்திய சந்தையை திறந்த விட்டால் தான் ஆயிற்று என ஒற்றை காலில் நிற்க….. நம் இந்திய நிர்வாகம் தீர்த்து சொல்லி இருக்கிறார்கள்.
இந்திய நலனே பிரதானம் என அழுத்தம் திருத்தமாக சொல்லி விட… ட்ரம்ப் தனது முசட்டு தனத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் இதனை.
அவர் ஏற்கனவே அறிவித்திருந்த 25% சதவிகித வரிக்கு இடைக்கால தடை வரும் 9 ஆம் தேதியோடு முடிவடைய … இன்னமும் இருதரப்பிலும் இறுதி ஒப்பந்தம் ஏதும் கையெழுத்து ஆகவில்லை.
நம் இந்திய தேசம் வரையறுக்கப்பட்ட
தேதியை வைத்து என்ன செய்வது… நாங்கள் கேட்கும் எதற்கும் செவி சாய்க்காத போது….. என்கிறார்கள். போதாக்குறைக்கு உலக வர்த்தக மையத்தை தொடர்பு கொண்டு புகார் ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்கள். இது டொனால்ட் ட்ரம்பை ஏகத்திற்கும் சீண்டி விட்டு இருக்கிறது என்கிறார்கள்.
நம் இந்திய தேசம், இப்படி தடாலடியாக சட்டத்திற்கு புறம்பாக வரி திணிப்பை வளர்ந்து வரும் தேசத்தின் மீது பிரயோகிப்பது எவ்வகையில் சரி என கேள்வி கேட்டு அதிரடித் திருக்கிறார்கள். இந்த வாதம் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
இருண்டு போன ட்ரம்ப், பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக பத்து சதவீத வரி என அறிவித்திருக்கிறார். இது அமெரிக்காவில் ஏகப்பட்ட புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறது.
போதாக்குறைக்கு எலான் மஸ்க் அவர் ஏற்கனவே அறிவித்திருந்த படி தனி கட்சி ஒன்றை தொடங்கி அதில் முக்கிய பதவியில் இந்தியர் ஒருவரை நியமிக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் கிரிப்டோ கரன்சியை தவிர்த்து டிஜிட்டல் கரன்சியை பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் பதவியேற்ற சமயத்தில் கிரிப்டோ கரன்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றி பேசி இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவும்.
அடுத்ததாக ரஷ்யாவுடனான வர்த்தகம் மற்றும் நல்லுறவை மறுபரிசீலனை செய்ய அவசியம் என்ன வந்தது என கேள்வி கேட்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்.
ஆனால் அதேசமயம் ரஷ்யாவின் S500 மற்றும் ஐந்தாம் தலைமுறை விமானங்களை வாங்க விருப்பம் இல்லை என்று தடாலடியாக அறிவித்தும் விட்டார்கள்.
எங்கள் தேவை பட்டியலில் இது இல்லை என்கிறார்கள். அமெரிக்கா அறிவித்த 500% வரி பற்றி கவலை இல்லை என்றும் சொல்லிவிட… ட்ரம்ப் புலம்ப ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..
அதாவது இந்தியா, தனது தேவை மற்றும் தேச நலனுக்கு மாத்திரமே முன்னுரிமை என வெளிப்படையாக அறிவித்திருப்பதாக பலரும் இதனை அவதானிக்கிறார்கள்.
மேற்சொன்ன இவையெல்லாம் ஒரு புறம் இருக்க….. இந்திய தேவைகளை அமெரிக்கா பூர்த்தி செய்து கொடுக்க.. அது சொல்வதை இந்தியா கேட்க வேண்டும் என விரும்புகிறது.
அதற்கு வாய்ப்பு இல்லை ராசா என நம்மவர்களும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். அது தான் பொறுக்கவில்லை அதற்கு.
அப்படி என்ன இந்தியாவிற்கு அது செய்து கொடுக்க…. அல்லது துணை நிற்க விரும்பியது…????
இதற்கு நம் இந்திய தேசத்தின் நகர்வுகளை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நீண்ட கால நிலுவையில் உள்ள கோரிக்கைகளில் ஒன்று….. தலாய் லாமாவின் கோரிக்கை. பல தசாப்தங்களாக இது தொடர்கிறது.
நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவராக அவர் இருக்கிறார். திபெத்திய லாமாக்களின் தலைவராகவும் அவரே நீடிக்கிறார்.
தீபெத் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக நம்ப வைக்க பட்டாலும் அது சீனாவின் வல்லாதிக்கத்தின் கீழ் இயங்குகிறது என்பதே நிஜம்.
இவரது தொன்னூறாவது வயது பூர்த்தியை கடந்த வாரத்தில் உலகமே கொண்டாடியது.
இவரது கோரிக்கையை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்….. அதற்கு பதிலாக அக்ஷை சின் பிராந்தியத்தை மீட்டெடுக்க வேண்டும் என ஆளாளுக்கு யோசனை சொல்லிக் கொண்டு நிற்கிறார்கள்.
நம் இந்திய தரப்பில் இதற்கான முன்னெடுப்புகள் நீண்ட கால நோக்கில் செயல்படுத்திக் கொண்டே வருகிறார்கள்.
இந்த இடத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்து திபெத் தன்னாட்சிப் பிரதேசம் என்பதாக ஏற்றுக் கொண்டதாக தலாய் லாமாவே அதன் தலைவர் என்பதாக ஒப்புக் கொண்டதாக கூறி சர்வதேச சமூகத்திற்கு அறிக்கை வாசித்திருக்கிறார்கள்.
இது வெளிப்புற பார்வையில்…..
உள்ளூர அங்கு முகாமிட நோட்டம் போட்டுக் கொண்டு நிற்கிறார்கள். இந்தியா இதற்கு மசியவில்லை.
காஷ்மீர் பிராந்தியம் முழுவதும் நம் இந்திய தேசத்திற்கே சொந்தம் என்பதை ஆவணங்கள் அடிப்படையில் நிரூபித்து விட…. பாகிஸ்தான் வசம் அவர்கள் ஆக்ரமிப்பில் உள்ள பகுதிகளை மீட்டெடுக்க அமெரிக்க உதவி தேவைப்படும் என சகுனம் பார்த்து நிற்க…… அதெல்லாம் அப்படி ஒன்றும் தலைபோகிற அவசரம் இல்லை சடுதியில் பின் வாங்கி இருக்கிறார்கள் நம்மவர்கள்.
ஆப்ரேஷன் ஸிந்தூர் சமயத்தில் குறைந்த பட்சம் இந்த இடங்களையாவது நாம் மீட்டெடுத்து இருக்க வேண்டும் என நம் தேசத்து மக்கள் பலரும் விரும்பியதாக புலனாய்வு தகவலும் அரசுக்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும் நம் இந்திய அரசு அவசரப் பட வேண்டாம் என்கிற நிலைப்பாட்டில் விடாப்பிடியாக நின்றனர்.
அதற்கு காரணம் அமெரிக்க தலையீடு தான். பாகிஸ்தான் உடைந்தால் அதன் கடன் சுமையை நம் இந்திய தேசம் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….
தவிர ஐநாவின் கண்காணிப்பில் அவர்களின் கூட்டு ராணுவம் மிச்ச சொச்சம் இருக்கும் பகுதியில் நிலை நிறுத்தப்படும் என்றனர்.
இது தேவையற்ற செலவினங்களை கொண்டு வரும் என்பதால் நம் இந்திய தரப்பில் ஏற்கவில்லை என்கிறார்கள்.
இவையெல்லாம் தாண்டி…….
விண்வெளியில் சீனா சர்வதேச நிலையத்தை கட்டமைப்பதோடு உலகின் அதி உணர் திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டரை நிலை நிறுத்த முழு மூச்சாக செயல்பட்டு கொண்டு வருகிறார்கள்…. இது மேற்கு உலக நாடுகளை பதைபதைக்க வைத்திருக்கிறது.
இன்று இல்லாவிட்டாலும் நாளை நம் இந்திய தரப்பில் இருந்து சீனாவிற்கோ அல்லது ஆப்பிரிக்க நாடுகளுடனோ வர்த்தகம் வலுப்பெற்று மேற்கு உலக நாடுகளில் தலைமை பீடமாக விளங்கும் அமெரிக்கா தனிமை பட நேரிடுமே என இப்போதே பயப்பட ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.
இதற்கு நம் இந்திய தரப்பில் இருந்து ஒரு நகர்வு தான் காரணம் என்றும் சொல்கிறார்கள்.
இந்தியா…… ஐந்தாம் தலைமுறை விமானங்களில் ஆர்வம் காட்ட வில்லை. ஆனால் அதி நவீன ஏவுகனை தொழில்நுட்ப பண்புகளில் முன்னோடியாக விளங்குகிறார்கள்.
அதுபோலவே வான் பாதுகாப்பு சாதனங்களில் பட்டையை கிளப்புகிறார்கள்.
இவை இரண்டுமே இந்திய தேசத்தை பல மடங்கு பலமுள்ளதாக மாற்றி இருக்கிறது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தவே விமானங்கள் மற்றும் எதிரி நாட்டின் ரேடாரில் சிக்காதிருக்க அதி நவீன போர் விமானங்கள் தேவை. ஆனால் இவற்றையெல்லாம் இந்திய தரப்பில் அதி நவீன ஏவுகணைகள் கொண்டே சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு உலக அளவில் அதி நவீன அதி உச்ச தொழில்நுட்ப பண்புகளை கொண்ட பங்கர் பஸ்டர் குண்டுகளை கனமான குண்டு வீச்சு விமானங்களில் கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் நடைமுறை சாத்தியம் மட்டுமே இருக்க…… இந்தியா மாத்திரமே அதனை ஏவுகணை கொண்டு செலுத்தும் தொழில்நுட்ப பொறிமுறையில் வெற்றி கண்ட ஓரே நாடாக விளங்குகின்றது.
இது நம்மில் பலருமே அறிந்திராத விஷயம்.
இவையெல்லாம் வல்லரசு கனவு கண்டு கொண்டு இருக்கும் அமெரிக்கர்களுக்கு ஏற்கவில்லை.
நம்மவரோ விடாமல் சுழன்று சுழன்று பதம் பார்த்து வருகிறார்.
கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நூற்றாண்டுக்கு முன் வெளிவந்த பத்திரிகை துணுக்கு செய்தி ஒன்றில்..
சீனா இந்தியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால்….. என்கிற தொனியில் கார்டூன் வரைபடம் ஒன்று மீண்டும் உலா வர ஆரம்பித்திருக்கிறது. பார்க்க படம் கீழே……
அதனை ஒட்டியே உலக நடப்புகள் இருப்பதாக மேற்கு உலக நாடுகளில் பலரும் வெளிப்படையாக புலம்பவே ஆரம்பித்து விட்டார்கள்.
டொனால்ட் ட்ரம்பே இருந்த பெயரை தக்க வைக்க முடியுமா என விட்டதை அவ்வப்போது முறைத்து பார்த்து கொண்டு வருகின்றார் என்கிறார்கள் அவரது அமைச்சரவை சகாக்கள்…..
மாறாக மறுமுனையில் நம் இந்திய தேசம் அனைத்திலும் ஆழமான வேர் பிடித்து வளர எத்தனித்து வருகிறது .
ஆம்…… இன்று உள்ள நிலையில் உலக அளவில் சீனாவின் அதிநவீன தொழில்நுட்ப பண்புகளை தொட்டுவிடும் தூரத்தில் இல்லை…. துரத்தி பிடிக்கும் தூரத்தில் ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கொண்டு விடுவோம்.
- ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்





