குட்பை படம் எனக்கு நல்ல மாற்றம் ஏற்படுத்தியுள்ளது-நடிகை ராஷ்மிகா..

877968 awarg - 2026

நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை, தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் அல்லு அர்ஜூனுடன் நாயகியாக இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்தது. அவருக்கு ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் ஜோடி சேர்ந்த அவர், வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதுதவிர, இந்தி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

images 2022 09 17T201405.181 - 2026
images 2022 09 17T201444.812 - 2026

பிரபல பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள குட்பை என்ற இந்தி திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். குடும்பத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையை கொண்டாடுவது மற்றும் அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ உதவ கூடிய சுய உண்மையை அறிதல் (தன்னிலை, தன்மதிப்பு போன்றவற்றை அறிதல்) ஆகியவை படத்தில் அழகாக வர்ணிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்தும்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

விகாஸ் பால் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா உள்ளிட்டோருடன் பவைல் குலாதி, எல்லி ஆவ்ரம், சுனில் குரோவர் மற்றும் சாஹில் மேத்தா ஆகியோரும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்ததில் ஒரு பெரிய உருமாற்றம் பெற்றுள்ளேன் என கூறும் ராஷ்மிகா, நான் ஒரு பஞ்சு போன்றவள். அதனால், என்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமைகளை உறிஞ்சி கொள்வேன் என கூறியுள்ளார். குட்பை படத்திற்கு முன்பும், குட்பை படத்திற்கு பின்பும் ராஷ்மிகா முற்றிலும் வேறுபட்டவள். அதில் பச்சன் சார் ஒரு பெரும் பங்காற்றி உள்ளார் என அவர் கூறியுள்ளார். நடிகர் அமிதாப்புடனான முதல் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா, முதல் நாளில் பச்சன் சாரை நான் சந்தித்தபோது, அவரது தனித்துவ பண்பை கண்டு மிரண்டு போனேன். அவர் மிக கனிவானவர். படப்பிடிப்பு தருணத்திலேயே, ஒரு நடிகராக அவரை பற்றி என்னால் நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது என கூறியுள்ளார். அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்களேன், என கேட்டதற்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதிலில், பச்சன் சாருடன் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் ஆச்சரியம் நிறைந்தது. எனது முதல் இந்தி திரைப்படத்திலேயே பச்சன் சாருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற எல்லோரையும் விட அவர் சிறந்ததொரு ஆசானாக இருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories