குட்பை படம் எனக்கு நல்ல மாற்றம் ஏற்படுத்தியுள்ளது-நடிகை ராஷ்மிகா..

877968 awarg - 2026

நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை, தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் அல்லு அர்ஜூனுடன் நாயகியாக இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்தது. அவருக்கு ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் ஜோடி சேர்ந்த அவர், வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதுதவிர, இந்தி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

images 2022 09 17T201405.181 - 2026
images 2022 09 17T201444.812 - 2026

பிரபல பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள குட்பை என்ற இந்தி திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். குடும்பத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையை கொண்டாடுவது மற்றும் அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ உதவ கூடிய சுய உண்மையை அறிதல் (தன்னிலை, தன்மதிப்பு போன்றவற்றை அறிதல்) ஆகியவை படத்தில் அழகாக வர்ணிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்தும்.

விகாஸ் பால் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா உள்ளிட்டோருடன் பவைல் குலாதி, எல்லி ஆவ்ரம், சுனில் குரோவர் மற்றும் சாஹில் மேத்தா ஆகியோரும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்ததில் ஒரு பெரிய உருமாற்றம் பெற்றுள்ளேன் என கூறும் ராஷ்மிகா, நான் ஒரு பஞ்சு போன்றவள். அதனால், என்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமைகளை உறிஞ்சி கொள்வேன் என கூறியுள்ளார். குட்பை படத்திற்கு முன்பும், குட்பை படத்திற்கு பின்பும் ராஷ்மிகா முற்றிலும் வேறுபட்டவள். அதில் பச்சன் சார் ஒரு பெரும் பங்காற்றி உள்ளார் என அவர் கூறியுள்ளார். நடிகர் அமிதாப்புடனான முதல் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா, முதல் நாளில் பச்சன் சாரை நான் சந்தித்தபோது, அவரது தனித்துவ பண்பை கண்டு மிரண்டு போனேன். அவர் மிக கனிவானவர். படப்பிடிப்பு தருணத்திலேயே, ஒரு நடிகராக அவரை பற்றி என்னால் நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது என கூறியுள்ளார். அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்களேன், என கேட்டதற்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதிலில், பச்சன் சாருடன் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் ஆச்சரியம் நிறைந்தது. எனது முதல் இந்தி திரைப்படத்திலேயே பச்சன் சாருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற எல்லோரையும் விட அவர் சிறந்ததொரு ஆசானாக இருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories