குட்பை படம் எனக்கு நல்ல மாற்றம் ஏற்படுத்தியுள்ளது-நடிகை ராஷ்மிகா..

877968 awarg - 2026

நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பற்றி நடிகை ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை, தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் அல்லு அர்ஜூனுடன் நாயகியாக இணைந்து நடித்த புஷ்பா திரைப்படம் ரசிகர்களை பெருவாரியாக கவர்ந்தது. அவருக்கு ஒரு திருப்புமுனையையும் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் ஜோடி சேர்ந்த அவர், வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்து வருகிறார். இதுதவிர, இந்தி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

images 2022 09 17T201405.181 - 2026
images 2022 09 17T201444.812 - 2026

பிரபல பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள குட்பை என்ற இந்தி திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்துள்ளார். குடும்பத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையை கொண்டாடுவது மற்றும் அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ உதவ கூடிய சுய உண்மையை அறிதல் (தன்னிலை, தன்மதிப்பு போன்றவற்றை அறிதல்) ஆகியவை படத்தில் அழகாக வர்ணிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை இத்திரைப்படம் வெளிப்படுத்தும்.

விகாஸ் பால் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, நீனா குப்தா உள்ளிட்டோருடன் பவைல் குலாதி, எல்லி ஆவ்ரம், சுனில் குரோவர் மற்றும் சாஹில் மேத்தா ஆகியோரும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்ததில் ஒரு பெரிய உருமாற்றம் பெற்றுள்ளேன் என கூறும் ராஷ்மிகா, நான் ஒரு பஞ்சு போன்றவள். அதனால், என்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமைகளை உறிஞ்சி கொள்வேன் என கூறியுள்ளார். குட்பை படத்திற்கு முன்பும், குட்பை படத்திற்கு பின்பும் ராஷ்மிகா முற்றிலும் வேறுபட்டவள். அதில் பச்சன் சார் ஒரு பெரும் பங்காற்றி உள்ளார் என அவர் கூறியுள்ளார். நடிகர் அமிதாப்புடனான முதல் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா, முதல் நாளில் பச்சன் சாரை நான் சந்தித்தபோது, அவரது தனித்துவ பண்பை கண்டு மிரண்டு போனேன். அவர் மிக கனிவானவர். படப்பிடிப்பு தருணத்திலேயே, ஒரு நடிகராக அவரை பற்றி என்னால் நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது என கூறியுள்ளார். அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்களேன், என கேட்டதற்கு நடிகை ராஷ்மிகா அளித்த பதிலில், பச்சன் சாருடன் பணியாற்றிய அனுபவம் முற்றிலும் ஆச்சரியம் நிறைந்தது. எனது முதல் இந்தி திரைப்படத்திலேயே பச்சன் சாருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற எல்லோரையும் விட அவர் சிறந்ததொரு ஆசானாக இருக்கிறார் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories