இந்த ஆண்டு சபரிமலை மண்டல – மகரவிளக்கு யாத்திரையில் கட்டுப்பாடுகள் நீக்கம்..

Published:

FB IMG 1663346412929 - 2026

இந்த ஆண்டு சபரிமலை மண்டல – மகரவிளக்கு யாத்திரையின் போது, ​​அதிகபட்சமாக பக்தர்களுக்கு தரிசன வசதி செய்து தரப்படும்‌ திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியுள்ளார்.

கேரளா தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அழைத்த கூட்டத்தில், கோவிட் காலத்தில் சபரிமலையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர வேண்டாம் என்றும், முன்பு போலவே பக்தர்களை அணுக அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கோவிட் காலத்தில் சபரிமலைக்கு தினமும் 10,000 பேர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் அடுத்த முறை கோவில் திறக்கப்பட்டதில் இருந்து தினமும் அதிகபட்ச பக்தர்களுக்கு தரிசன வசதி செய்ய தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

மெய்நிகர் வரிசை மூலம் புனித யாத்திரையை ஊக்குவிக்கவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான விரிவான வசதிகளை தேவசம் போர்டு வழங்கும்.மேலும் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும்.

சாலை அமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்து மதிப்பிட சிறப்பு கூட்டம் நடத்தப்படும்.
கூட்டத்தில் சபரிமலை, நிலக்கல், வட்டவலம் ஆகிய இடங்களில் செய்து முடிக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக சபரிமலைக்குள் நுழைவதற்கான மெய்நிகர் வரிசை இந்த ஆண்டு முதல் காவல்துறைக்கு பதிலாக தேவசம் போர்டு மூலம் அமல்படுத்தப்படும்.இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் நேற்று நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

சபரிமலை சீசன் தொடங்கும் முன், ஒவ்வொரு துறையும் உரிய நேரத்தில் முடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

  தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்த கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜு மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img