April 27, 2025, 11:05 PM
30.2 C
Chennai

கட்டணம் செலுத்த முடியாது: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகை!

madurai kappalur tollgate protest locals
madurai kappalur tollgate protest locals

உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த முடியாது என மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகளால் பரபரப்பு சூழல் ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று, திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி உள்ளிட்ட 3 பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் பொழுது சுங்கக் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என இப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மறுத்து வருகின்றனர். இது தொடர்பாக, அவ்வப்போது சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு., போராட்டம் நடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.

இதனால், கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுங்கச்சாவடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்த அவசியம் இல்லை என தற்காலிகமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது மீண்டும் திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணம் செலுத்தச் சொல்லி வலியுறுத்தியதால் 4 நாட்களுக்கு முன் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

ALSO READ:  விருதுநகரில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!

இந்நிலையில் சனிக்கிழமை நேற்று, தொடர்கதையாக உள்ள சுங்கச்சாவடி கட்டணத்திற்கு நிரந்தரமான தீர்வு வேண்டும் எனக் கோரி, சுங்கச்சாவடி முன்பு திருமங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சுங்கச் சாவடியில் உள்ள அனைத்து வாகனங்கள் செல்லும் பாதையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சுங்கச்சாவடி வழியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், கேரளா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அவசர ஊர்திகளும் அந்தப் பகுதி வழியே செல்ல முடியாமல் தவித்தன.

மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது தொடர் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டம் நடத்தியவர்கள் உறுதிபடக் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Topics

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories