வி.கே.புரம் இந்து முன்னணி மாநாடு: முருகானந்தம், குற்றாலநாதன் மீது வழக்கு பதிவு!

nellai church sand1 - 2026

கூம்பு வடிவ குழாய் அகற்றம், சாம கொடைக்கு இடையூறு, விநாயகர் சதுர்த்தி வழக்கு என, தொடர்ந்து இந்து விரோத போக்கில் செயல்படும் (நெல்லை மண்டல மாநாட்டில்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரின் பாரபட்சமான இந்து விரோத முகத்திரையைக் கிழித்தற்காக, உச்சங்குளத்தைச் சார்ந்த சாமுவேல்தாஸ் என்பவரிடம் புகாரைப் பெற்று, வி.கே.புரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் குற்றாலநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

புகார் கொடுத்த சாமுவேல்தாஸ் உச்சங்குளம் சர்ச் பாதிரி மற்றும் காவல் துறை தூண்டுதலில் இந்த பொய் புகாரைக் கொடுத்துள்ளார்.

உச்சங்குளம் சர்ச் பாதிரியார் அங்குள்ள வருவாய்த் துறை குளத்தை ஆக்கிரமித்து அதில் மணல் திருடி சர்ச் கட்டவும் வியாபாரம் செய்யவும் பயண்படுத்தி வருகிறார். சர்ச் இடத்தில் குளத்து மண் குவிக்கப்பட்டுள்ள புகைப்படம் இது…

இந்தக் கனிம வள திருட்டை கண்டு கொள்ளாமல் வழக்கு பதியாமல் இருக்க காவல் துறைக்கு கைமாற்றாகவே இந்த பொய்ப் புகார் அளித்துள்ளார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் உள்ளூர்வாசிகள். எனவேதான், உச்சங்குளம் பாதிரி உள்ளிட்ட கும்பல் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையாம்!

வி.கே.புரத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்து முன்னணி மாநாடும் கூட, போலீஸார் திட்டமிட்டுக் கொடுத்த இடத்திலேயே நடைபெற்றது. தூத்துக்குடியில் நிலைமை சரியில்லை என்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை இருப்பதாலும், போலீஸார் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் வேறு இடத்தில் மாநாடு நடத்திக் கொள்ள கேட்டுக் கொண்டனர். அவர்களே பார்த்து அமைத்துக் கொடுத்து, தூத்துக்குடியை விட்டு வெளியில் வெகு தொலைவில் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இந்த மாநாட்டை தூத்துக்குடி போலீஸாரின் வழிகாட்டலில் நடத்தியுள்ளனர். ஆனால், தற்போது அதற்கும் வழக்கு பதிவு செய்துள்ளது நெல்லை காவல்துறை.

nellai church sand2 - 2026

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் எப்படிப்பட்ட பாரபட்சமற்ற நேர்மையான நடவடிக்கைக்குச் சொந்தக்காரர் என்பதை இதுவும் காட்டிக் கொடுத்து விடும். பார்க்கத்தானே போகிறோம்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories