23-03-2023 1:53 PM
More
    Homeஉரத்த சிந்தனைதெலங்கானா காங்கிரஸ் அறிக்கை பற்றி பேசுறோமே...! 2016 திமுக., தேர்தல் அறிக்கையப் பாருங்க கொஞ்சம்...!

    To Read in other Indian Languages…

    தெலங்கானா காங்கிரஸ் அறிக்கை பற்றி பேசுறோமே…! 2016 திமுக., தேர்தல் அறிக்கையப் பாருங்க கொஞ்சம்…!

    Stalin DMK - Dhinasari Tamil

    தெலுங்கானா தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கிறிஸ்துவர்களுக்கு அறிவித்துள்ள சலுகைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் – ஆனால், 2016 சட்டசபைத் தேர்தலின் பொழுது திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை பற்றித் தெரியுமா? –

    minority telangana - Dhinasari Tamil

    திமுக தேர்தல் அறிக்கை 2016

    பக்கம் 112: பத்தி 419: கோயில்களுக்கு சொந்தமான மனைகளில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு, அந்த நிலங்களை வழங்க ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் உயர்நிலை குழு –

    பக்கம் 85, பத்தி 295 : வக்ப் வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் -source: https://www.dmk.in/dmk2016Manifesto_Tamil.pdf

    எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் பாருங்கள் – ஆனால், அந்தத் தேர்தலில் கூட முஸ்லிம்கள் மட்டும் வாக்களித்து தி.மு.க கூட்டணி 99 தொகுதிகளைப் பெற்று விடவில்லை – இந்து மதத்திலேயே இருந்து கொண்டு அறிவை அடமானம் வைத்து விட்ட மூடர்கள் வாக்களித்துத் தான் இத்தனை தொகுதிகள் கிடைத்தது –

    இந்தத் திருடர்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டே தேர்தலைச் சந்தித்து வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது வெட்கக்கேடானது !

    நாம் எதையெல்லாம் இந்த திருட்டுத் திராவிடக் கூட்டத்திடம் இழந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

    முதலாவதாக நமது கோவில்களுக்குச் சொந்தமான 4,78,347.96 ஏக்கர் நிலம் ஆக்ரமிப்பில் உள்ளது – இதில் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், கண்ணம்பாளையம் கிராமத்தில் – ” கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி” – முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களால் நிறுவப்பட்டு நடப்பதை அறிவீர்களா?

    கருணாநிதி பெயரில் அமைந்த அந்தக் கல்லூரியின் அமைவிடம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், முன்னொரு காலத்தில் கருணாநிதி பீரங்கி வைத்து பிளக்க ஆசைப்பட்ட – தில்லை நடராசருக்கும் சொந்தம் என்பதை அறிவீர்களா?-‘

    கருணாநிதி பெயரை தாங்கி நிற்கும் கல்லூரி அமைவிடம், – “இந்தச்சொத்தை எவ்வித வில்லங்க பராதீனத்திற்கும் உட்படுத்தாமல் என்ற ” நிபந்தனையுடன் அந்த நிலங்களின் விவசாய வருமானத்திலிருந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்க்கும், –
    தில்லை நடராசருக்கும் தீப ஆராதனை செய்யவும் அந்தச் சிவாலயங்களுக்கு பசியுடன் வரும் சேவார்த்திகளுக்கு அன்னதான சமராதனை செய்யவும் மட்டும் ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தம் என்பதை அறிவீர்களா?-

    இந்த நிலங்களை, திரிபுரமதை எரி செய்த சிவன் சொத்துக்களை திட்டமிட்டு பதிவு செய்யப்படாத போலி உயில் மூலம் ஆவணங்களை உருவாக்கி, – சட்டத்தின் கண்களை கட்டி , அறிவியல் ரீதியாக, விஞ்ஞான பூர்வமாக அபகரித்தது மட்டுமல்லாமல் –
    தமிழகத்தின் மூத்த நாத்திகரான கருணா பெயரை வேறு வைத்துள்ளனர் –

    இது ஒரு சாம்ப்பிள் தான் – இதே போல் கழக ஆட்சியில் மட்டுமல்ல –

    வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் ஆட்சியில் பல ஏக்கர் கோவில் நிலங்கள் 99 வருட குத்தகை என்ற அடிப்படையில் பல சர்ச்சுகளும், மிஷனரிகளும், கிறிஸ்தவக் கல்லூரிகளும் குத்தகை முடிந்தும் கூட இன்று வரை செயல்பட்டு வருது உங்களுக்குத் தெரியுமா? –

    கோவில்களில் 7000 சிலைகளைக் காணோம் என்று அறிவித்துவிட்டு பொன். மாணிக்கவேல் அவர்கள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில் கூட … உத்திரகோஷமங்கை மரகத நடராஜரைத் திருட முயற்சி நடக்கிறது –
    அதே நாளில் மணப்பாறையில் ஏழு சிலைகள் திருடு போகிறது – அதற்கும் முந்திய வாரம் குருவித்துறை குரு ஸ்தலத்தில் சிலைகள் திருடு போகின்றன என்றால் –

    இதற்கு முன் எத்தனை சிலைகள் நகைகள், பொக்கிஷங்கள் களவு போயிருக்கும்?- ஆனால், இவற்றுக்கெல்லாம் காரணமான கயவன்களுக்கு நாம் வாக்களித்து வருகிறோம் !

    இந்துக் கோவில்களை எல்லாம் எடுத்துக் கொண்டு _ அந்த வருமாணத்தில் சர்ச்சுகளுக்கும், மசூதிகளுக்கும் நிதி தருகிறது அரசாங்கம் – ஹாஜிக்களுக்கு மாதம் 20,000 சம்பளம். ஆனால், கோவில் பூசாரிகளுக்கு 4,000 சம்பளம் !

    ஹஜ், ஜெருசலேம் செல்ல மானியம் – தைப்பூசத்தன்று நாம் பழனி சென்றால் இரண்டு மடங்கு பேருந்துக் கட்டணம் – என்ன நியாயம் இது?

    இன்று பல ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டுக் கொண்டிருக்கின்றன – ஆனால், தெருவுக்குத் தெரு சர்ச்சுகளும், மசூதிகளும் நாள்தோறும் பெருகி வருகின்றன- அதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் இங்கே 90% இந்துக்கள் – 100% இஸ்லாமியனும், 100% கிறிஸ்தவன்களும் துளி கூட விட்டுக் கொடுக்காமல் தனக்குச் சாதகமானவனைத் தேர்ந்தெடுக்கிறான் –

    ஆனால், 90 % இந்துக்கள் நடப்பது என்னவென்றே புரியாமல் தனக்கு எதிராகச் செயல்படுபவனைத் தேர்ந்தெடுக்கிறான்… வெட்கமான விஷயம் இது.-

    இந்துக்கள் இனிமேலாவது புரிந்து கொண்டு இருப்பதையாவது காப்பாற்ற முன்வர வேண்டும் – இல்லை தலைக்கு மேல் போகட்டும் என்றிருந்தால் – மொத்தமாக அழிந்துவிடும் – இந்துக்களின் எழுச்சியே; தேசத்தின் எழுச்சி!

    கருத்து: ந.முத்துராமலிங்கம்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    fourteen − 13 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,630FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...