December 6, 2025, 3:00 AM
24.9 C
Chennai

என் சூழ்நிலை தெரியாம நீங்களா தீர்மானிக்காதீங்க: அர்ரஹ்மான் மகள் ஆவேசம்!

AR Rahman Daughter Speech About her Father - 2025

எந்த உடை அணிவது என்பது என் முடிவு என்று அர்ரஹ்மான் மீதான விமர்சனங்களுக்கு மகள் கதிஜா பதிலடி கொடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் அர்ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறினார். மேலும், ‘ஆஸ்கர் விருது உங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் நிறைய சமூக சேவை செய்கிறீர்கள். இது, உங்களிடம் நான் அதிகம் போற்றும் ஒரு குணம்’ என்றும் உணர்ச்சிப் பூர்வமாக பேசினார். 

ஆனால் ரஹ்மானின் மகள் வெளிப்படுத்திய வார்த்தைகளும் தோற்றமும் பலரது புருவங்களையும் உயர்த்தியது. இஸ்லாமிய அரபு நாடுகளின் உடையை இந்திய சூழலில் மேடையில் அணிந்து வந்ததை பலரும் விமர்சனம் செய்தனர். இதைப் போன்ற ஒரு தோற்றத்துடன் ஹிந்து ஆசாரத்தைப் பேணும் ஒருவரின் வீட்டுப் பெண் தங்களது பாரம்பரிய உடையிலோ, மொழியிலோ தன்னை வெளிப்படுத்தியிருந்தால்… இந்த சமூகமும் ஊடகங்களும் என்ன பாடு படுத்தியிருப்பார்களென்ற குரலை எழுப்பினர்!

இது குறித்து மனம் திறந்து கருத்தை தெரிவித்துள்ள கதிஜா, எனது தந்தையுடன் அண்மையில் நான் மேடையில் பேசிய விவரங்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன! இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்பார்க்கவில்லை!

ஆனால், இத்தகைய சூழல் எனது தந்தையால் திணிக்கப்பட்டதாகவும் எனது தந்தை இரட்டை நிலைப்பாடு உடையவர் என்றும் கருத்துக்கள் உலா வருகின்றன! இது குறித்து சொல்ல வேண்டுமானால் இது என்னுடைய விருப்பம் என்று தான் சொல்ல வேண்டும்

என்னுடைய வாழ்க்கையில் எனது பெற்றோர்கள் எதையும் திணித்ததில்லை இது என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தேர்வு! நான் வளர்ந்த பெண்! என் வாழ்க்கையில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்ட வளர்ந்த பெண்

எந்த ஒரு மனிதனுக்கும் அவனோ அல்லது அவளோ அவர்கள் விரும்பியதை அணிந்துகொள்ள உரிமை இருக்கிறது! எனவே என்னுடைய உண்மையான சூழ்நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் நீங்களாக ஒரு முடிவுக்கு வரவேண்டாம் என்று கதிஜா கூறியுள்ளார்!

இருப்பினும், அந்த உண்மையான சூழ்நிலைதான் உங்களை இப்படி மேடையில் தோன்றும்படி நிறுத்தியிருக்கிறது; அதற்காக நாங்கள் வருத்தப் படுகிறோம்! உங்கள் நிலையை எண்ணி வருந்துகிறோம்! என்று பதில் அளித்திருக்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories