லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பேளாஹூளி!

Bolahooli - 2026

பேளாஹூளி
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, கத்தரி, முருங்கை – 2 கப்(நறுக்கிய துண்டுகள்)
உரித்த பச்சைப் பட்டாணி – கால் கப்
புளி – எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்பொடி – கால் தேக்கரண்டி
நெய் – 1/8 கப்
எண்ணெய் – கால் கப்
வறுத்து அரைக்க:
பெருங்காயம் – ஒரு சிறுத் துண்டு
உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
தனியா – 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 10 – 12
வெந்தயம் – கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் – கால் கப்
பொடிசெய்ய:
ஏலக்காய் – 2
ஜாதிக்காய் – சிறு துண்டு
கிராம்பு – 2
பட்டை – சிறுத் துண்டு
தாளிக்க:
கடுகு – 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி
கறிவேப்பிலை

செய்முறை
அரிசியை தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைத்து குழைய வேக விடவும். துவரம் பருப்பையும் வேக விட்டுக் கொள்ளவும். காய்கறிகளை சிறு துண்டுகளாக்கி சிறிது உப்பும், மஞ்சள்பொடியும் சேர்த்து நசுங்கும் பதமாக வேக விட்டுக் கொள்ளவும்.

வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களுடன் பாதியளவு தேங்காய்த் துருவலை 3 தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். மீதமுள்ள தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி செய்யக் கொடுத்துள்ள மசாலா சாமான்களை எண்ணெயில்லாமல் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.

புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை குக்கரில் போட்டு நன்கு கிளறவும். அதில் கரைத்த புளியை விட்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

சிறிது நேரம் கொதித்து புளி வாசனை போனதும், வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்து கெட்டியானதும், வறுத்து அரைத்த பொடியை சேர்க்கவும்.

அதன் பிறகு வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். மேலே வறுத்த தேங்காய், மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். நெய்யை காய வைத்து முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.

மணமான பேளாஹூளி அன்னம் பொரித்த அப்பளம், அவியல், உருளை ரோஸ்ட்டுடன் அருமையாக இருக்கும்.

இதில் விருப்பப்பட்டால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்கலாம். பூண்டு வதக்கி சாமான்களுடன் அரைத்து சேர்க்கலாம். கர்நாடகத்தின் மிக பிரபலமான சிறப்பான உணவு இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories