லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சுண்டல் பிரியாணி!

sundal piriyani - 2026

சுண்டல் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெள்ளை கொண்டைக்கடலை – 1 1/2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 2
பச்சைமிளகாய் – 4
இலவங்கம் – 3 எண்ணம்
பட்டை – ஒரு துண்டு
ஏலக்காய் – 2 என்னம்
எலுமிச்சைச்சாறு – 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் – 1 டீஸ்பூன்
கெட்டியான தயிர் – 3/4 கப்
நெய் – 1/2 கப்
சோடாஉப்பு – 2 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
புதினா இலை – 4 தண்டு
பிரியாணி இலை – 2 எண்ணம்

செய்முறை
அரிசியை கழுவி தண்ணீரில் உப்பு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வெள்ளை கொண்டைக்கடலையை உப்பு கலந்த நீரில் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெள்ளை கொண்டைக்கடலையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சோடா உப்பு, சிறிதளவு உப்பு ஆகியன கலந்து வேக வைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசியை களைந்துபோட்டு, அதில் கரம் மசாலாதூள், எலுமிச்சைச்சாறு, உப்புப்போட்டு அரைவேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலி வைத்து அதில் நெய் விட்டு இலவங்கம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, அடுத்து பச்சைமிளகாய், வெங்காயாம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் கடைசியில் உருளைக்கிழங்குப் போட்டு வதக்கவும்.
பின்னர் கலவையினுள் மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு 2 நிமிடம் கிண்டு கிண்டி விடவும், வாணலியை அடுப்பில் இருந்து கீழே இறக்கி தயிர்விட்டு, அதில் வேகவைத்த கொண்டைக்கடலையும் போட்டு கிண்டவும்.
அதை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நெய் மேலே வரும் வரை சூடுப்படுத்தி கலவை சேர்ந்து வரும் வரை வேக விடவும்.
கடைசியில் அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துள்ள சாதத்தை கொண்டைக்கடலை கலவையுடன் கலந்து மிதமான தீயிலேயே 10 நிமிடம் மூடிப் போட்டு வேகவைக்கவும்.
அதில் புதினாஇலை, பிரியாணிஇலை இரண்டையும் தனியாக வதக்கி பிரியாணியில் போடவும்.
இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார். ஏதேனும் ரெய்த்தாவுடன் பரிமாறவும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

தயிர் ஒரு புளிப்புதன்மைக்கு வேண்டிதான் விரும்பினால் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். உப்பு எப்பொழுதுமே பார்த்துப்போடவும், அரிசியும் சரி, கடலையும் சரி உப்பு சேர்த்தேதான் ஊற வைப்பதால் சமைக்கும் போது பார்த்து போடவும். ஒரே மாதிரியான பிரியாணியாக சமைப்பதற்கு இது ஒரு வித்தியாசமான சுவையுடன் இருக்கும் பிரியாணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories