லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சுண்டல் பிரியாணி!

sundal piriyani - 2026

சுண்டல் பிரியாணி
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெள்ளை கொண்டைக்கடலை – 1 1/2 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 2
பச்சைமிளகாய் – 4
இலவங்கம் – 3 எண்ணம்
பட்டை – ஒரு துண்டு
ஏலக்காய் – 2 என்னம்
எலுமிச்சைச்சாறு – 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலாதூள் – 1 டீஸ்பூன்
கெட்டியான தயிர் – 3/4 கப்
நெய் – 1/2 கப்
சோடாஉப்பு – 2 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
புதினா இலை – 4 தண்டு
பிரியாணி இலை – 2 எண்ணம்

செய்முறை
அரிசியை கழுவி தண்ணீரில் உப்பு கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
வெள்ளை கொண்டைக்கடலையை உப்பு கலந்த நீரில் முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் வெள்ளை கொண்டைக்கடலையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சோடா உப்பு, சிறிதளவு உப்பு ஆகியன கலந்து வேக வைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசியை களைந்துபோட்டு, அதில் கரம் மசாலாதூள், எலுமிச்சைச்சாறு, உப்புப்போட்டு அரைவேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலி வைத்து அதில் நெய் விட்டு இலவங்கம், பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து, இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, அடுத்து பச்சைமிளகாய், வெங்காயாம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் கடைசியில் உருளைக்கிழங்குப் போட்டு வதக்கவும்.
பின்னர் கலவையினுள் மஞ்சள்தூள், மிளகாய்தூள் போட்டு 2 நிமிடம் கிண்டு கிண்டி விடவும், வாணலியை அடுப்பில் இருந்து கீழே இறக்கி தயிர்விட்டு, அதில் வேகவைத்த கொண்டைக்கடலையும் போட்டு கிண்டவும்.
அதை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நெய் மேலே வரும் வரை சூடுப்படுத்தி கலவை சேர்ந்து வரும் வரை வேக விடவும்.
கடைசியில் அரைவேக்காடாக வேகவைத்து எடுத்துள்ள சாதத்தை கொண்டைக்கடலை கலவையுடன் கலந்து மிதமான தீயிலேயே 10 நிமிடம் மூடிப் போட்டு வேகவைக்கவும்.
அதில் புதினாஇலை, பிரியாணிஇலை இரண்டையும் தனியாக வதக்கி பிரியாணியில் போடவும்.
இப்பொழுது சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார். ஏதேனும் ரெய்த்தாவுடன் பரிமாறவும்.

தயிர் ஒரு புளிப்புதன்மைக்கு வேண்டிதான் விரும்பினால் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். உப்பு எப்பொழுதுமே பார்த்துப்போடவும், அரிசியும் சரி, கடலையும் சரி உப்பு சேர்த்தேதான் ஊற வைப்பதால் சமைக்கும் போது பார்த்து போடவும். ஒரே மாதிரியான பிரியாணியாக சமைப்பதற்கு இது ஒரு வித்தியாசமான சுவையுடன் இருக்கும் பிரியாணி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories