ஆன்லைன் வகுப்பு: புதிய நெறிமுறைகள்! தமிழக அரசு அறிவிப்பு!

online class
online class

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்புத் தொடங்கியதில் இருந்து லாக்டவுன், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் என வழக்கமான இயல்பு வாழ்க்கை மாறிவிட்டது.

பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்துவிதமான கல்வி நிலையங்களிலும் ஆன்லைன் (online classes) மூலமாக பாடம் நடத்துவது இயல்பாக, கொரோனா வைரஸ் பரவல் முக்கிய காரணமானது. தற்போது முதல் வகுப்பு படிக்கும் குழந்தையும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கின்றனர்.

இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகக்கூட மாணவர்களை பாலியல் ரீதியாக சீண்டும் சம்பவங்கள் வெளியாகி, பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணக்கர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இனிமேல் அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் அந்தந்த பள்ளி நிர்வாகங்களால் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு தொடர்பான காட்சிகளை, பள்ளி நிர்வாகம் (school administration) மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (parent-teacher association) என இருவரும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைத் தவிர்ப்பதற்காக ஒரு நிலையான இயக்க நடைமுறையை கொண்டுவர ஒரு குழுவை அமைப்பதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்குநர், நிபுணர்கள், உளவியலாளர்கள் (psychologists), கல்வியாளர்கள், சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் (crimes against women and children)குறித்து நிபுணத்துவம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்கள்.

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் எண் ஒன்று உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்ட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் (POCSO Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முக்கியமாக, இது போன்ற புகார்களில், மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் புகார்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories