January 25, 2025, 7:12 AM
23.2 C
Chennai

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாளை விடுமுறை: தென்காசி ஆட்சியர்!

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 18ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பங்குனி மாத பௌர்ணமியும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை ( பங்குனி 4-ம் தேதி ) பங்குனி உத்திர கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிவிடும். அன்றைய தினம், முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும்.

பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தியும், கண்ண அலகு, மயில் அலகு, தேர் அலகு என பல்வேறு விதமாக அலகு குத்தியும் , முருகனின் கோயில்களுக்கு பாதயாத்திரை சென்றும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவர்.

அந்த வகையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை ( மார்ச் 18ம் தேதி ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ALSO READ:  நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; பிரதமர் மோடி இரங்கல்!

முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!