தமிழகத்தில் முதல் முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்!

darumapuri lkg opened school - 2026

தமிழகத்திலேயே முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் பணியில் சேர ஆசிரியர்கள் மறுப்பதால் மாற்று நடவடிக்கைகளை அரசு விரைவு படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் மான்டிசோரி கல்வி முறையில் மழலையர் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

பாடத்திட்டம் மற்றும் கால அட்டவணை தயார் நிலையில் உள்ளன. மழலையர் பள்ளிகளுக்கு வகுப்புகள் காலை 9.30 முதல் மதியம் 4 மணி வரை நடைபெறும். மதியம் 12.10 முதல் 1 வரை மதிய உணவு நேரம் வழங்கப்படும். பகல் 1 முதல் 3 மணி வரை துாங்க வைத்து பின் ஒரு மணி நேரம் பாடம் நடத்தி மாலை 4 மணிக்கு வகுப்புகள் முடிக்கப்படும்.

இந்தக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடை, காலணி, ஒரு ஸ்வெட்டர், ரெயின்கோட், கலர் பென்சில், பாடப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் 2 ஆண்டுகள் செயல்படுத்தப்படும்.

இதனிடையே மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடை நிலை ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப் படுகின்றனர். இதை எதிர்த்து பெரும்பாலான ஆசிரியர்கள் பணி மாறுதல் உத்தரவை மறுத்து விடுப்பில் சென்று விட்டனர்.

இந்தச் சூழ்நிலையை சமாளிக்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் உபரி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்துள்ளனர். தவிர இடைநிலை ஆசிரியர்களில் இளையவரை தற்காலிகமாக மாற்றும் முயற்சியில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பணி மாறுதலை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories