நெல்லை மனோன்மணீயம் பல்கலை.,க்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

Published:

k pichumani - 2026

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று வெளியிட்ட நியமன் அறிவிப்பில் , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு கே பிச்சுமணி துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்!

இவர் 37 வருடங்கள் ஆசிரியப் பணியில் இருந்தவர் என்றும், மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் சிஎஸ்ஐஆர் வேதியியல் துறையில் பணியாற்றியவர்; இவர் தாய்பே டோக்கியோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஜப்பான் -ல் விசிட்டிங் புரொபசராக உள்ளவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தின் சிண்டிகேட் மற்றும் செனட்டில் இருந்துள்ளார்! மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் 190க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியுள்ளார்! வேதியல் பிரிவில் விருது வாங்கியுள்ளார்!

தற்போதைய துணைவேந்தர் கி.பாஸ்கரன் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பல்கலை., அளவில் பிரிவு உபசார விழா நாளை வெள்ளிக் கிழமை நடைபெறுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img