டொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்!

trump modi meet - 2026

Hydroxychloroquine என்னும் மலேரியா மாத்திரியை ஏற்றுமதியை கடந்த சனிக்கிழமை முதல் தடை செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.

ஞாயிற்றுக் கிழமை அன்று இந்திய பிரதமர் நரேந்தர மோடியை
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார். அந்த மாத்திரைகள் எங்களுக்கு வேண்டும், அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. அப்போது ஒரு பத்திரிகையாளர், “ நரேந்தர மோடியின்
இந்திய அரசு ( மலேரியா மாத்திரை) ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பொருளை ஏற்றுமதி செய்ய நீங்கள் தடை விதித்து இருக்கிறீர்களே, அந்த தடைக்கு எதிராக மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றது இது (இந்தியா விதித்த தடை) என்று கவலை கொள்கிறீர்களா?” என கேட்கிறார்.

நிருபரின் அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இந்தியாவின் ஏற்றுமதி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதனால்,அமெரிக்காவுக்கு எதிராக விதிக்கப் பட்டதல்ல என்கிறார். மோடியுடன் நடந்த இணக்கமான பேச்சு வார்த்தையைப் பற்றி தெரிவிக்கிறார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

அமெரிக்கா விதித்திருக்கும் தடைக்கு மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றதாக இந்தியாவின் தடை ஆணை இருக்குமானால், பதிலடிக்கு பதிலடி தருவேன் என்று தான் கூறுகிறார். மாத்திரை தரா விட்டால் பதிலடி என்றல்ல.

எனினும், இந்தியா விதித்த ஏற்றுமதித் தடையின் விளைவாக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு நன்மை கிடைத்து இருக்கிறது. மலேரியா மாத்திரையை உற்பத்தி செய்யும்
இந்திய மருத்துவ நிறுவனமான IPCA வுக்கு அமெரிக்கா
விதித்து இருந்த ஏற்றுமதித் தடை தளர்த்தப்பட்டு இருக்கிறது.

மலேரியா மாத்திரை ஏற்றுமதிக்கு பேரமாக IPCA தடை தளர்வை மட்டும் தான் இந்தியா பெற்றதா, அல்லது மேலும் சலுகைகளை பெற்றதா என்று தெரியவில்லை.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

கொரோனா பாதிப்பு சர்வதேச நெருக்கடி. ஒவ்வொரு நெருக்கடியும் வெறும் துயரம் மட்டுமல்ல. ஒரு நல்ல வாய்ப்பும் கூட! கொரோனா தடுப்பு மருத்துவ சாதனங்களை வைத்து உலக சந்தையில் 5 G ஐ விற்பனை செய்வது வரையிலான முயற்சிகளில் சீனா ஈடுபடுகிறது.

இந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.

எல்லாமும் வெளியில் தெரிய அவசியமில்லை. வெளியில் தெரிவது மட்டுமே உலக அரசியல் அல்ல.

  • வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories