டொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்!

trump modi meet - 2026

Hydroxychloroquine என்னும் மலேரியா மாத்திரியை ஏற்றுமதியை கடந்த சனிக்கிழமை முதல் தடை செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.

ஞாயிற்றுக் கிழமை அன்று இந்திய பிரதமர் நரேந்தர மோடியை
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார். அந்த மாத்திரைகள் எங்களுக்கு வேண்டும், அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. அப்போது ஒரு பத்திரிகையாளர், “ நரேந்தர மோடியின்
இந்திய அரசு ( மலேரியா மாத்திரை) ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பொருளை ஏற்றுமதி செய்ய நீங்கள் தடை விதித்து இருக்கிறீர்களே, அந்த தடைக்கு எதிராக மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றது இது (இந்தியா விதித்த தடை) என்று கவலை கொள்கிறீர்களா?” என கேட்கிறார்.

நிருபரின் அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இந்தியாவின் ஏற்றுமதி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதனால்,அமெரிக்காவுக்கு எதிராக விதிக்கப் பட்டதல்ல என்கிறார். மோடியுடன் நடந்த இணக்கமான பேச்சு வார்த்தையைப் பற்றி தெரிவிக்கிறார்.

அமெரிக்கா விதித்திருக்கும் தடைக்கு மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றதாக இந்தியாவின் தடை ஆணை இருக்குமானால், பதிலடிக்கு பதிலடி தருவேன் என்று தான் கூறுகிறார். மாத்திரை தரா விட்டால் பதிலடி என்றல்ல.

எனினும், இந்தியா விதித்த ஏற்றுமதித் தடையின் விளைவாக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு நன்மை கிடைத்து இருக்கிறது. மலேரியா மாத்திரையை உற்பத்தி செய்யும்
இந்திய மருத்துவ நிறுவனமான IPCA வுக்கு அமெரிக்கா
விதித்து இருந்த ஏற்றுமதித் தடை தளர்த்தப்பட்டு இருக்கிறது.

மலேரியா மாத்திரை ஏற்றுமதிக்கு பேரமாக IPCA தடை தளர்வை மட்டும் தான் இந்தியா பெற்றதா, அல்லது மேலும் சலுகைகளை பெற்றதா என்று தெரியவில்லை.

கொரோனா பாதிப்பு சர்வதேச நெருக்கடி. ஒவ்வொரு நெருக்கடியும் வெறும் துயரம் மட்டுமல்ல. ஒரு நல்ல வாய்ப்பும் கூட! கொரோனா தடுப்பு மருத்துவ சாதனங்களை வைத்து உலக சந்தையில் 5 G ஐ விற்பனை செய்வது வரையிலான முயற்சிகளில் சீனா ஈடுபடுகிறது.

இந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.

எல்லாமும் வெளியில் தெரிய அவசியமில்லை. வெளியில் தெரிவது மட்டுமே உலக அரசியல் அல்ல.

  • வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories