December 5, 2025, 5:19 PM
27.9 C
Chennai

டொனால் ட்ரம்ப் மிரட்டினாராம்; நரேந்தர மோடி பயந்து விட்டாராம்!

trump modi meet - 2025

Hydroxychloroquine என்னும் மலேரியா மாத்திரியை ஏற்றுமதியை கடந்த சனிக்கிழமை முதல் தடை செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.

ஞாயிற்றுக் கிழமை அன்று இந்திய பிரதமர் நரேந்தர மோடியை
தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார். அந்த மாத்திரைகள் எங்களுக்கு வேண்டும், அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.

அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. அப்போது ஒரு பத்திரிகையாளர், “ நரேந்தர மோடியின்
இந்திய அரசு ( மலேரியா மாத்திரை) ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறது.

அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பொருளை ஏற்றுமதி செய்ய நீங்கள் தடை விதித்து இருக்கிறீர்களே, அந்த தடைக்கு எதிராக மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றது இது (இந்தியா விதித்த தடை) என்று கவலை கொள்கிறீர்களா?” என கேட்கிறார்.

நிருபரின் அந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், இந்தியாவின் ஏற்றுமதி மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதனால்,அமெரிக்காவுக்கு எதிராக விதிக்கப் பட்டதல்ல என்கிறார். மோடியுடன் நடந்த இணக்கமான பேச்சு வார்த்தையைப் பற்றி தெரிவிக்கிறார்.

அமெரிக்கா விதித்திருக்கும் தடைக்கு மற்ற நாடுகள் தரும் பதிலடி போன்றதாக இந்தியாவின் தடை ஆணை இருக்குமானால், பதிலடிக்கு பதிலடி தருவேன் என்று தான் கூறுகிறார். மாத்திரை தரா விட்டால் பதிலடி என்றல்ல.

எனினும், இந்தியா விதித்த ஏற்றுமதித் தடையின் விளைவாக இந்திய மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு நன்மை கிடைத்து இருக்கிறது. மலேரியா மாத்திரையை உற்பத்தி செய்யும்
இந்திய மருத்துவ நிறுவனமான IPCA வுக்கு அமெரிக்கா
விதித்து இருந்த ஏற்றுமதித் தடை தளர்த்தப்பட்டு இருக்கிறது.

மலேரியா மாத்திரை ஏற்றுமதிக்கு பேரமாக IPCA தடை தளர்வை மட்டும் தான் இந்தியா பெற்றதா, அல்லது மேலும் சலுகைகளை பெற்றதா என்று தெரியவில்லை.

கொரோனா பாதிப்பு சர்வதேச நெருக்கடி. ஒவ்வொரு நெருக்கடியும் வெறும் துயரம் மட்டுமல்ல. ஒரு நல்ல வாய்ப்பும் கூட! கொரோனா தடுப்பு மருத்துவ சாதனங்களை வைத்து உலக சந்தையில் 5 G ஐ விற்பனை செய்வது வரையிலான முயற்சிகளில் சீனா ஈடுபடுகிறது.

இந்தியாவும் தன் பங்குக்கு மலேரியா மாத்திரையை வைத்து மட்டுல்ல, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மற்ற மருத்துவ உதவிகளை வைத்து பல நாடுகளோடும் ராஜாங்கரீதியான பேரங்களை நடத்திக் கொண்டு இருக்கலாம்.

எல்லாமும் வெளியில் தெரிய அவசியமில்லை. வெளியில் தெரிவது மட்டுமே உலக அரசியல் அல்ல.

  • வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories