‘சொந்த செலவில்’ உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

rajendrabalaji helping - 2026

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த செலவில், பயனாளிகளுக்கு உதவித் தொகைகளை வழங்கி, தேவையான பொருள்களையும் வழங்கியிருக்கிறார்.

கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப் படுத்த சமூகப் பரவலை தடுக்க வேண்டும் என்று கருதி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடைகள் பூட்டப் பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட தடை. அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் வரக்கூடாது என மக்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என சுமார் 1000 பேருக்கு தேவையான பலசரக்குப் பொருட்களை தனது சொந்த செலவில் வழங்க முடிவு செய்தார்.

அதன்படி அரிசி, புளி, பருப்பு, கொண்டைக்கடலை, எண்ணெய், மிளகு, கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், சாம்பார்பொடி, மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள், பெருங்காயம், உப்பு உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் வினியோகம் செய்ய வசதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழகம் முழுவதும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரிய கோவில்களில் வேலை பார்க்கும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், மற்றும் பணியாளர்களுக்கு, மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறிய கோவில்களில் பணிபுரிபவர்களுக்கு, மாத ஊதியம் கிடையாது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் கிராம பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. அவற்றை சார்ந்துள்ள அர்ச்சகர்கள், கோவில் திருவிழாக்கள், மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை கொண்டு, தங்களது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து கொள்கின்றனர். தமிழக கோவில்களில், பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள், நாள் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும் காலம். கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நோய் தடுப்பு நடவடிக்கையாக, கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இதனால், பல ஆயிரக்கணக்கான பூசாரிகள், அர்ச்சகர்கள், வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.

இதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் , சிவகாசி இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு ரூபாய்10,000 வீதமும் கோயில் பணியாளர்களுக்கு ரூபாய் 5000 வீதமும் மொத்தம் 50 நபர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 80ஆயிரம் நிதி உதவியை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

அவரது இந்த நேரமறிந்து செய்த உதவிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுமக்களும் பெருமளவில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories