விஜயபதம்: வேத மொழியின் வெற்றி வழிகள்! – தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்?

vijayapadham

விஜய பதம்
– வேத மொழியின் வெற்றி வழிகள்!

தெலுங்கில்: பி.எஸ் சர்மா 
தமிழில்: ராஜி ரகுநாதன்

6. Talent Management
– தூதன் எவ்வாறு இருக்க வேண்டும்?

தூதன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீராமதூதரான ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி!

ஸ்ரீமத் ராமாயணத்தில் தூதனுக்கு இருக்கவேண்டிய இயல்புகளை வால்மீகி முனிவர் இவ்வாறு விவரிக்கிறார்… தற்போதும் பயன்படும் குணங்கள் இவை.

“அனுரக்த: ஸுசிர்தக்ஷ: ஸ்ம்ருதிமான் தேசகாலவித் !
வபுஷ்மான் வீதபீர்வாக்மீ தூதோ ராஞ்ஜ: ப்ரஸஸ்யதே !!”

அரசனிடம் கௌரவத்தோடு கூடிய அன்புள்ளவன்,  சாமர்த்தியசாலி, ஞானமுள்ளவன், தேச கால தத்துவமும் சமயோசிதமும் அறிந்தவன், பூகோள அறிவு உள்ளவன், அழகான வடிவுள்ளவன், அச்சமற்ற பேச்சு வல்லமை நிறைந்தவன் – சிறந்த தூதுவனாக புகழ் பெறுவான்.

மனம் நிலையற்று அலையும் குணம் கொண்ட தூதர்கள் தாம் பணிபுரியும் இடத்தையும் சமய சந்தர்ப்பத்தையும் கவனிக்காமல் நடந்து கொண்டால் காரியம் கெட்டுப்போகும்.

தூதனுக்கு இருக்க வேண்டிய மேலும் எட்டு குணங்களை விதுரர் குறிப்பிடுவதாக மகாபாரதத்தில் வியாசர்  விவரிக்கிறார். 

hanuman
hanuman

“அஸ்தப்தமக்லீபம தீர்க சூத்ரம் 
சானுக்ரோசம் ஸ்லக்ஷ்ணமஹார்ய மன்யை:
அரோக ஜாதீய முதார வாக்யம்
தூதம் வதம்த்யஷ்ட குணோபபன்னம்”

– மகாபாரதம் உத்யோக பர்வம் 37/ 27.

தூதனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்-

கர்வமற்ற குணநலம். 
திறமை, சாமர்த்தியம்.
வேலையை இழுத்தடிக்காமல்  முடிக்கும் குணம்.
தயை, பரோபகாரம். 
அனைவரும் விரும்பும் தன்மை. செல்வம் பெண் சொத்து வாகனம் போன்றவற்றில் பேராசைக்கு அடிமையாகாது இருத்தல்.
உடல் வலிமை, ஆரோக்கியம் கொண்டிருத்தல்.
மரியாதையோடு உரையாடும் இயல்பு.

“கார்ய கர்மணி நிர்திஷ்டே யோ  பஹூன்யபி ஸாதயேத் !
பூர்வ கார்யா விரோதேன ஸ கார்யம் கர்துமர்ஹதி !! 

– சுந்தரகாண்டம் 41/5 

உரிமையாளர் ஆணையிட்ட பணியை செய்து முடிப்பதோடு தொடர்புடைய சில பணிகளையும் சேர்த்து வெற்றிகரமாக முடிப்பவனே சாமர்த்தியசாலி, செயலூக்கம் கொண்டவன்.

“காதயன்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின: !”
– சுந்தரகாண்டம் 2/40

தாமே புத்திசாலி என்று கர்வம் கொள்ளும் தூதுவர்கள் செய்ய வேண்டிய பணியை கெடுத்துவிடுவர்.

சுபம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories