மதத்தின் பின் ஒளிந்து கொண்டு பாஜக., எதிர்ப்பு அரசியல்!

sofia - 2026

பாஜக தெளிவான வேலைத் திட்டத்துடன் அரசியல் செய்யும் கட்சி. இந்துத்துவம் என்பது- மையப்படுத்த ஒரு இந்து மதம்,ஒரே மொழி ஹிந்தி- இவ்வாறாக ஒற்றைப்படுத்தலுடன் மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் கருத்தியல். இதன் பின்னால் இருக்கும் வர்க்கநலன் என்பது பெருமுதலாளிகளினதாகும்.

பனியா-பிராமண சாதிகளின் நலன்களுக்கு சாதகமானது என்று பிரச்சாரம் இருந்தாலும் பிராமண சாதிகளில் ஏழைகளுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை. அது வழங்கும் மதம் என்னும் போதை மட்டும்தான் அவர்களுக்கு மிச்சம்.

இந்துத்துவத்தைத் தோற்கடிப்பதென்பதை பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிடுவது என்று சுருக்கிப் புரிந்துகொள்வது வெற்று அரசியலாகும்.

பாஜக தேர்தலில் தோற்றுப்போனால்கூட வரக்கூடிய காங்கிரஸ் ஆட்சியோ,அல்லது வேறொரு மூன்றாம் தரப்பு கூட்டணி ஆட்சியோ இதே கொள்கைகளைத்தான் மேலே இனிப்புப் பூசி நடைமுறைப்படுத்துவார்கள்.

அத்துடன் அவர்கள் விடும் தவறுகளால் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும். எனவே ஆட்சி மாற்றம் என்பது இந்துத்துவ செயற்திட்டத்தை சற்று மட்டுப்படுத்தலாம்,பிற்போடலாம்,ஆனால் தோற்கடிக்க முடியாது. அதனால்தான் பாஜக ஒழிக,மோடி ஒழிக என்று சுகமாகச் சொறிந்து கொள்வதில் எந்தப் பயனுமில்லை.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

இந்துத்துவத்தை தோற்கடிக்க பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் அரசியலாலேயே முடியும். வடக்கே இந்து-முஸ்லிம் என்ற அரசியல் பிளவையும்,சாதிய அரசியலையும் தாண்டி வேறொரு அரசியல் இல்லை.

இந்து-முஸ்லிம் பிளவுகளை,சாதிய அரசியலைத் தாண்டி மக்களை ஒன்று திரட்ட மொழிவாரி இனங்களால் மட்டுமே முடியும். வடக்கில் மக்கள் மொழிகள் நசுக்கப்பட்டு இந்தி என்னும் ஒற்றை மொழி போலியாக கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்துத்துவத்தின் ஒற்றைப்படுத்தலுக்கான ஒரு கருவியாக மொகலாயரின் மொழியான ஹிந்தி பயன்படுவது ஒரு முரண்நகையாக இருந்தாலும் இந்துத்துவப் பேரரசும், மொகலாய ஆட்சியும் வர்க்க நலன்களில் ஒரே பிரிவினருக்கே சாதகமானவை என்பதால் அவற்றுக்கு ஒரே கருவி பொதுவாக இருப்பது ஆச்சரியமில்லை.

இந்துத்துவத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வது இந்தியா முழுவதும் முழுமையாக மொழிவாரி மாநிலங்களாக உருவாக்கப்படுவதிலும் இந்தியா முழுமையான கூட்டாட்சியை நோக்கி செல்வதிலுமே தங்கியுள்ளது. அதற்கான செயற்திட்டங்களை உருவாக்குவதை விட்டுவிட்டு பாஜகவின் தமிழகத் தலைவர்களிலேயே எளிதாகக் கிண்டலுக்கு உள்ளாகும் தமிழிசை சௌந்தரராஜனை பார்த்து பாசிச பாஜக ஒழிக என்று கூச்சலிடுவது செம காமடி.

அதை செய்தவரை அவரின் அரசியல் பின்னணிகூட அறியாமல் புரட்சியாளர் என்று கொண்டாடுவது தமிழர்களின் அரசியல் வறுமையைக் காட்டுகின்றது.

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

கவனம், நீங்கள் புரட்சியாளர் என்று நினைப்பவர் எவ்வித அரசியல் சிந்தனையுமற்றவராகவும்,வெற்று மதவெறுப்பில் மட்டுமே பாஜகவுக்கு எதிராக கூச்சல் போட்டவராகவும் இருந்துவிடப்போகிறார்.

கருத்து: – Nadesapillai Sivendran

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories