காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 30): ஆசாத்தின் அடிச்சுவட்டில்!

chandra shekhar ajzad - 2026

காந்தி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ கூலிப்படையினர் என்று எண்ணி விடக் கூடாது என்பதற்காகத்தான் அவர்களைப் பற்றிய சிறிய குறிப்பை தொடர்ந்து கொடுத்து வருகிறேன்.

அவர்கள் இந்த பாரத தேசத்தை நேசித்தவர்கள்’அவர்கள் இதயம் தேசம் தேசம் என்றே துடித்தது… இந்த தேசத்தின் நலனுக்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்தவர்கள்.. இருப்பது ஒரு உயிர் அது போகட்டும் இந்த தேசத்திற்காக என எண்ணிச் செயல்பட்டவர்கள்..  என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த இடத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் அவர்களின் நினைவு ஏனோ வருகிறது..

தன் காலத்திற்குப் பிறகு வந்த சுதந்திரb போராளிகளுக்கு வழி காட்டியவர் அல்லவா!

‘’ IF YET YOUR BLOOD DOES NOT RAGE THEN IT IS WATER THAT FLOWS IN YOUR VEINS ; FOR WHAT IS THE FLUSH OF YOUTH, IF IT IS NOT OF SERVICE TO THE MOTHERLAND ”

’’ உங்கள் இரத்தம் கொந்தளிக்கவில்லை யென்றால்,உங்கள் இளமையின் வேகம் தாய்நாட்டின் சேவைக்காக பயன்படவில்லையென்றால் உங்கள் நரம்புகளிலே ஓடுவது தண்ணீர்தான் ‘’ என வீர முழக்கமிட்டவர் ஆசாத்.

தாய் திருநாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பாதோன் வாழ்வும் ஒர் வாழ்வா..? என பொங்கியெழுந்து தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள் இந்த தேசத்திலே எண்ணற்றோர்…!

‘ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ‘ என்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை சுதந்திர போராட்டக் காலத்தில் பாடிச் சென்றார்.

இந்தg கருத்திலே எனக்கு உடன்பாடில்லை.. தேச விடுதலையிலே.. அந்தக் காலத்து புரட்சியாளர்களின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவிற்கு இருந்திருக்கிறது என நான் நம்புகிறேன்.

‘ நான் சுதந்திரமானவன் சுதந்திரமானவன் ‘ எனும் உள்ள கோஷத்தோடு வலம் வந்தவர்களில் முக்கியமானவர் வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அந்த சாவர்க்கர், தன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு கிராமம் கிராமமாகச் சென்று சுதந்திர எழுச்சியுரைகள் நிகழ்த்தினார்,தேசப்பக்தி பாடல்களை கதை வடிவங் களிலே இயற்றி பாடி மக்களிடையே எழுச்சியூட்டினார்.. தேசம் சந்தித்து வரும் பிரச்னைகளை துண்டு பிரசுரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே கொண்டுச் சென்றார்.

இந்தb பிரசுரங்களை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்தது, விநியோகிப்பதோ, வைத்திருப்பதோ குற்றம் என அறிவித்தது.. இப்படியாக,

தன்னுடைய 22ஆவது வயதிலேயே,அன்னிய ஆங்கிலேய ஆட்சியின் துணிச்சலான,சற்றும் பயமற்ற எதிரியாகத் தன்னை பதிவுச் செய்துக் கொண்டார் சாவர்க்கர்…

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories