அட ஆண்டவா..?! இதென்ன வக்கிர எண்ணம்?!

namathuamma - 2026

கமல்ஹாசனுக்கு பதில் கொடுக்கிறேன் பேர்வழி என்று இப்போது பலரும் கமலின் அந்தரங்க வாழ்க்கையைத்தான் முச்சந்திக்கு இழுத்துள்ளனர்.

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நின்று கொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன் என்று பேசினார்.

இதற்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோல்,  அதிமுக அமைச்சர்கள்  சிலரும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சும் ஊடக பேட்டியும் தற்போது பரவலாக ஆதரவைப் பெற்று வருகிறது. வழக்கம்போல் திராவிட இயக்கங்கள், கிறிஸ்துவ அமைப்புகளால் வளர்க்கப்பட்டு வரும் தமிழர் அமைப்புகள் உள்ளிட்டவை  கமலுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரியும் வகையில் அதிமுக.,வின் அதிகாரபூர்வ நாளேடான “நமது அம்மா” கமல் தன் மகளுக்கு முத்தம் கொடுக்கும் படத்தை வெளியிட்டு எழுதியுள்ள கட்டுரை, மலின ரசனைக்கு உரியது என்றும், தரம் தாழ்ந்தது என்றும் விமர்சனங்கள் முன் வைக்கப் பட்டு வருகின்றனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் கமலை விமர்சனம் செய்வது என்பது, அவரது தற்போதைய ஹிந்து தீவிர வாதி எனும் கருத்துக்காக என்று எடுத்துக் கொள்வதை விட, கடந்த காலங்களில் கமல்ஹாசன் அதிமுக.,வை செய்து வரும் விமர்சனங்களுக்கான பதிலடி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜெயலலிதா என்ற ஆளுமை மரித்த பின்னர் அரசியலில் உயிர்த்தெழுந்த கமல்ஹாசன், ஆளும் தரப்பை சீண்டுவதையும் விமர்சனம் என்ற பெயரில் தனிப்பட்ட வகையில் விமர்சனம் செய்வதையுமே பழக்கமாகக் கொண்டிருந்தார்.  இதனால் அதிமுக., அமைச்சர்களுக்கும் கமல் தரப்புக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் மூண்டது.

இந்நிலையில், நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த கமல் எதிர்ப்பு என்பது, தற்போது அடித்துள்ள இந்து தீவிரவாதம் என்ற காற்றால் மேலும் கிளறப்பட்டு, இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகவே பழைய முட்டல் மோதல் ஒட்டல் உரசலில் ராஜேந்திர பாலாஜி வாய் திறந்ததும்!

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு அதிமுகவின் நாளிதழ் கமலைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இன்று வெளியாகியுள்ள நாளிதழில் கமலை இழிவுபடுத்தி, மகளின் முத்தப் புகைப்படத்துடன், பொலிகாளை என்று குறிப்பிட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு அப்பா கமல் முத்தம் கொடுப்பதைப் போட்டு கேவலப்படுத்தி இருப்பது மிகவும் கண்டத்துக்குரியது என்று பலரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் தலைவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருந்த @AIADMKOfficial
இடத்தில் எப்படி இப்படி ஒரு தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறது!

அதிமுக., நாளிதழில் மகளுக்கு தந்தை முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை போட்டு பொலிகாளை என தலைப்பு வேறு! அடச்சீ எத்தனை அருவருப்பான புத்தி! ????????????

தனது மகளுக்கு கமல் முத்தமிடும் படத்தை போட்டு அதற்கு கேவலமான ஒரு தலைப்பையும் இட்டிருக்கிறது அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா!

அதிமுகவின் கண்ணியமும் கட்டுப்பாடுமா அடகு வைக்கப்பட்டுவிட்டது ?

அரசியல்ல கமலை விமர்சிக்க காரணங்கள் எத்தனையோ இருக்க.. தனிப்பட்ட வாழ்க்கையை, அவர் திருமண பந்தங்களை இழுக்கறதே அநாகரீகம். இதுல அப்பா பொண்ணு போட்டோ போட்டு கட்டுரைல்லாம் கீழ்த்தரம். நாக்கை வெட்டுவேன்னு சொல்றதை விட இது வன்முறை. உணர்வுபூர்வமா பலவீனப்படுத்தற மட்டமான யுக்தி.
ஆனாலும் “நமது அம்மா”னு ஜெயலலிதா பெயர்ல பத்திரிக்கை நடத்திட்டு இதெல்லாம் பண்ணும்போது கொஞ்சங்கூட உறுத்தாது இவனுகளுக்கு?!

இப்படி பல்வேறு விமர்சனங்களை இன்றைய நமது அம்மா செய்தி எதிர்கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories