தீபாவளி ஸ்பெஷல் டிப்ஸ்!

sweets - 2026

குலாப் ஜாமுனை எண்ணெய்யில் பொரிக்கும்போது சிறிது கருகி விட்டாலும் ஜாமும் இருகி, சுவை மாறிவிடும். இதற்கு ஜாமுனை சர்க்கரை பாகுடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து சூடு செய்து இறக்கினால் போதும் ஜாமும் மிருதுவாக இருக்கும்.

அதிரசம் செய்யும்போது அதிரச மாவுடன் பேரிச்சம் பழத் துண்டுகள் சேர்த்து, பிசைந்து அதிரசம் செய்தால் புது சுவையுடன் இருக்கும் குழந்தைகள் விரும்பி உண்பர்.

சிலருக்கு சீடை செய்யும்போது வெடித்து விடும். அதற்காகவே சீடைச் செய்வதை கைவிட்டு இருப்பார்கள். இனி சீடை செய்யும் போது, மாவினை சீடையாக உருட்டிய பிறகு, ஊசியால் சிறு துளையிட்ட பின் எண்ணெய்யில் பொரித்தால் வெடிக்காது.

பலகாரத்தில் அதிக எண்ணெய்த் தன்மை இருந்தால் இரண்டு நாட்களுக்குமேல் பயன்படுத்த முடியாது. எனவே எண்ணெய் பலகாரங்கள் செய்ய ஆரம்பிக்கும் போதே, எண்ணெய்யில் சிறு துண்டு புளியைப் போட்டு பின், பலகாரங்களைப் பொரித்து எடுத்தால் பலகாரங்கள் எண்ணெய் உறியாமல் இருக்கும்.

இந்த தீபாவளிக்கு சிறு தானியங்கள் தான் டிரெண்ட். உங்கள் வீட்டில் எந்தச் சிறுதானிய பலகாரம் செய்தாலும் மாவுடன், சிறிது பொட்டுக் கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால், பலகரம் மிருதுவாக இருக்கும்.

அதிரசம் செய்வதன் சூட்சமமே பாகு எடுப்பதில்தான் உள்ளது. அதிரசத்திற்கு பாகு எடுக்க வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும். வெல்லம் பாகு பதம் வந்ததும், பாகினை எடுத்து தண்ணீர் வைத்திருக்கும் பவுலில் சிறிது ஊற்றி பார்க்கவும். பாகு கையில் ஒட்டாமல் பந்து போன்று உருண்டு வருந்தால் பதம் சரியாக இருப்பதாக அர்த்தம்.

மைசூர் பாக்கினைச் சற்று புதுச் சுவையுடன் செய்ய, மாவு பிசையும்போது முந்திரியைப் பொடித்துச் சேர்த்தால் புதிய சுவையுடன் இருக்கும்.

தட்டையின் சுவையினைக் கூடுதலாக்க மாவு பிசையும்போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து செய்ய சுவை கூடுதலாக இருக்கும்.

நார்த் இந்தியன் ரெசிப்பி செய்ய விருப்பமா அப்போ ரசகுல்லா ச்செய்யலாம்.ரசகுல்லா செய்யும் போது, சர்க்கரைப் பாகுடன் சிறிது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் திரிந்த பன்னீரை, தண்ணீர் இல்லாமல் உலர்த்த வேண்டும். அப்போதுதான் ரசகுல்லா உடையாமல் இருக்கும்.

தேங்காய் பால் முறுக்கு செய்ய மாவு பிசையும்போது சிறிது வெண்ணெய் சேர்த்து பிசைந்தால் கூடுதல் சுவையோடு முறுக்கு தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories