spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுவைரஸ் தொற்றை தவிர்க்கவும் நோய் எதிர்ப்பு சக்திப் பெறவும்..

வைரஸ் தொற்றை தவிர்க்கவும் நோய் எதிர்ப்பு சக்திப் பெறவும்..

- Advertisement -
orange

இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

  1. உடலுக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடும். அமிலத்தன்மையைத் தணித்து, பசியை உண்டாக்கும். செரிமானக் கோளாறுகளை வேகமாகப் போக்க வல்லது.
  2. சாத்துக்குடியை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
  3. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
  4. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. நமது ஞாபகதிறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் சாத்துக்குடி சிறப்புற செயல்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்களும் தினசரி சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம்.

ஜூஸ் மிகவும் குறைவான அளவு கலோரிகளை கொண்டுள்ளது. அவற்றில் 90% தண்ணீர் மட்டுமே உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் மிகவும் நல்லது.

ஊட்டச்சத்து விவரம்
100 கிராம் சத்துக்குடியில் பின்வரும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன (2).

கலோரிகள்: 25 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட்: 8.4 கிராம்
நார்ச்சத்து: 0.4 கிராம்
கொழுப்பு: 0.1 கிராம்
பொட்டாசியம்: 117 மி. கிராம்
கால்சியம்: 14 மி. கிராம்
வைட்டமின் C: 30 மி. கிராம்
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
மொசாம்பி, எலுமிச்சை, ஆரஞ்சு உட்பட அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் C மிக அதிகமாக உள்ளது.

வைட்டமின் சி நமது நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும்

மேலும், சாத்துக்குடி ஜூஸ் வைரஸ் தொற்றுகளை தடுக்கவும், அவை ஏற்பட்டால் விரைவாக குணபடுத்தவும் உதவும் .

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது
ஜூஸ் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளை கொண்டுள்ளது (

இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் புற்று நோயைத் தடுக்கும் குணங்களை கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எனவே, தொடர்ந்து சாத்துக்குடி ஜூஸ் உட்கொள்வதன் மூலம், புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும்

சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது
சாத்துக்குடி ஜூஸ் நிறைய சிட்ரிக் அமிலங்களை கொண்டவை என்பது நம் அனைவரும் அறிந்ததே.

சிட்ரிக் அமிலம் சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

எனவே, சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால், சிறுநீரக கற்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்க முடியும்

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ஜூஸில் நமது எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் கணிசமான அளவு உள்ளது.

மேலும், சாத்துக்குடி ஜூஸ் பாலிபனொல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட்டுகள் மிக அதிகமாக உள்ளன.

இந்த ஆன்டிஆக்சிடென்ட்டுகள் எலும்புகளை பலப்படுத்த உதவக்கூடும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன

சர்க்கரை நோயை வராமல் தடுக்க உதவும்
சாத்துக்குடி ஜூஸில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அதிகமாக உட்கொள்வது, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. நமது ஞாபகதிறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe