அ முதல் னௌ வரை.. அனைத்திற்கும் அப்பத்தா தீர்வு!

health tips 1
health tips 1

அம்மை போட்டு ஜூரமா..

துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சம அளவில் சேர்த்து நீர் விட்டு மை போல் அரைத்து உடம்பின் மேல் தடவினால் ஜுரம் நீங்கி அம்மை மறையும்.
கத்தரி விதைகளுக்கு அம்மைக் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு.

அம்மை வடுக்கள் மறைய…

நாள்தோறும் ஆவிவ் எண்ணெயைத் தழும்புகள் மேல் தடவிவர தழும்புகள் மறையும்.

அரணைக் கடிக்கு…

அரணை கடித்து விட்டால் உடனே சிறிது பனைவெல்லம் சாப்பிடலாம். அல்லது வசம்பு சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்து சுட்டுப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட அரணைக் கடி நஞ்சு முறிந்து விடும்.

அரணைக்கடித்தால்.. சாரணைச் செடியின் வேர் 20 கிராம் அளவு எடுத்து துளசிச்சாறு விட்டரைத்து பசும்பாலில் கலந்து பருக வேண்டும். சாரணை வேர், துளசி சாறு விட்டரைத்து கடிவாயில் பற்றும் போட குணமாகும்.

அடிக்கடி காற்று பிரிகிறதா?

காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு இவற்றை சம எடை எடுத்து நெய் விட்டு தனித் தனியே வறுத்து, இடித்துப் பொடி செய்து, அரை தேக்கரண்டியளவு காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர காற்று பிரிவது நின்று விடும்.

அண்ட வாதமா?

200 கிராம் இஞ்சியை மேல் தோலை சீவி வில்லைகளாய் நறுக்கி குப்பை மேனிச் சாறுவிட்டு விரவி, 30 கிராம் வெள்ளெருக்கம் பூ சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்து இரவில் பனியில் வைத்தெடுத்து காலையிலும் மாலையிலும் 9 நாள்கள் சாப்பிட்டு வர அண்டவாதம் அறவே போகும்.

ஆஸ்துமா தொந்தரவு குறைய…

தூதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் படுக்கப் போகும் முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு குறையும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட சிரமமாக இருந்தால் உடனே வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனை மூக்கருகே வைத்து உறிஞ்ச கவாசம் சற்று சமன்படும்

அடிக்கடி சுண்டைக்காய் வற்றலை சமைத்துச் சாப்பிட்டு வர வறட்சி இருமல், சுரம், வயிற்றில் பூச்சிகள். ஆஸ்துமா அனைத்தும் குணமாகும்.

பத்து அவுன்ஸ் செங்கரும்புச் சாறுடன் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளை ஏழு நாள்கள் அருந்தினால் ஆஸ்துமா தொல்லை குறையும்.

நாலு வில்வ இலைகளுடன், நாலு துளசியையும் சேர்த்துக் கசக்கி அத்தடன் நாலு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட ஆஸ்துமா உபத்திரவம் குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories