February 22, 2026, 3:10 AM
25.6 C
Chennai

அ முதல் னௌ வரை.. அனைத்திற்கும் அப்பத்தா தீர்வு!

health tips 1
health tips 1

அம்மை போட்டு ஜூரமா..

துளசி, இஞ்சி, ஓமம் மூன்றையும் சம அளவில் சேர்த்து நீர் விட்டு மை போல் அரைத்து உடம்பின் மேல் தடவினால் ஜுரம் நீங்கி அம்மை மறையும்.
கத்தரி விதைகளுக்கு அம்மைக் கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு.

அம்மை வடுக்கள் மறைய…

நாள்தோறும் ஆவிவ் எண்ணெயைத் தழும்புகள் மேல் தடவிவர தழும்புகள் மறையும்.

அரணைக் கடிக்கு…

அரணை கடித்து விட்டால் உடனே சிறிது பனைவெல்லம் சாப்பிடலாம். அல்லது வசம்பு சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்து சுட்டுப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து சாப்பிட அரணைக் கடி நஞ்சு முறிந்து விடும்.

அரணைக்கடித்தால்.. சாரணைச் செடியின் வேர் 20 கிராம் அளவு எடுத்து துளசிச்சாறு விட்டரைத்து பசும்பாலில் கலந்து பருக வேண்டும். சாரணை வேர், துளசி சாறு விட்டரைத்து கடிவாயில் பற்றும் போட குணமாகும்.

அடிக்கடி காற்று பிரிகிறதா?

காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், சுக்கு இவற்றை சம எடை எடுத்து நெய் விட்டு தனித் தனியே வறுத்து, இடித்துப் பொடி செய்து, அரை தேக்கரண்டியளவு காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர காற்று பிரிவது நின்று விடும்.

அண்ட வாதமா?

200 கிராம் இஞ்சியை மேல் தோலை சீவி வில்லைகளாய் நறுக்கி குப்பை மேனிச் சாறுவிட்டு விரவி, 30 கிராம் வெள்ளெருக்கம் பூ சேர்த்து அரைத்து நன்றாகக் கலந்து இரவில் பனியில் வைத்தெடுத்து காலையிலும் மாலையிலும் 9 நாள்கள் சாப்பிட்டு வர அண்டவாதம் அறவே போகும்.

ஆஸ்துமா தொந்தரவு குறைய…

தூதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி நாள்தோறும் படுக்கப் போகும் முன் சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு குறையும்.

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட சிரமமாக இருந்தால் உடனே வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனை மூக்கருகே வைத்து உறிஞ்ச கவாசம் சற்று சமன்படும்

அடிக்கடி சுண்டைக்காய் வற்றலை சமைத்துச் சாப்பிட்டு வர வறட்சி இருமல், சுரம், வயிற்றில் பூச்சிகள். ஆஸ்துமா அனைத்தும் குணமாகும்.

பத்து அவுன்ஸ் செங்கரும்புச் சாறுடன் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து காலை, மாலை இரண்டு வேளை ஏழு நாள்கள் அருந்தினால் ஆஸ்துமா தொல்லை குறையும்.

நாலு வில்வ இலைகளுடன், நாலு துளசியையும் சேர்த்துக் கசக்கி அத்தடன் நாலு மிளகையும் சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட ஆஸ்துமா உபத்திரவம் குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories