December 7, 2025, 8:25 PM
26.2 C
Chennai

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

health tips
health tips

கண் மாந்தம் போக…

குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் மார்புச்சளி, கண மாந்தம், மாந்த ஜூரம் இவை போக நல்வேளைப் பூவை சுத்தம் செய்து சாறு பிழிந்து அத்துடன் கொஞ்சம் முலைப்பால் கலந்து உள்ளுக்குக் கொடுக்க சீக்கிரத்தில் குணமாகும்.

கட்டிகளுக்கு…

எருக்கம்பாலில் மஞ்சளை உரைத்துக் கட்டியின் உச்சியில் மட்டும் காலை, மாலை தடவி வர கட்டி அப்படியே அமுங்கி விடும்.

பலாப் பாலை எடுத்து நெறிக்கட்டிகள், நீண்ட நாள்களாக பழுத்து உடையாத குளிர்க்கட்டிகள் ஆகியவற்றின் மேல் பூசி வர அவை எளிதில் உடையும் அல்லது அமுங்கி விடும்.

கல்லீரல் சீர்பட..

  • எலுமிச்சை சாறு. தக்காளி சாறு. தேன் மூன்றும் சம அளவில் கலந்து காலை, மாலை இரு வேளையும் வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் அப்பிட்டு வர கல்லீரல் சீர்கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் க்ஷயரோக இருமலும் கூடக் குறையும். இரத்த ஓட்டம் சீர்படும். இருதயமும் பலமடையும். மேலும் சிறுநீரிலுள்ள சர்க்கரையும் குறையும்.

கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் ஏதேனும் இருந்தால் துளசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.

ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும் பாலில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து உடனே சாப்பிட்டு விடுங்கள். சீக்கிரத்தில் குணமாகி விடும்.

கண்களில் அரிப்பா?

கண்களில் அரிப்பும் நமைச்சலும் ஏற்பட்டால் உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி ஒரு துணியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறெடுத்து கண்களைக் கழுவுங்கள். சரியாகி விடும்.

கண்வலி இருந்தாலும், கண் சிவப்பு, அரிப்பு போன்றவை இருந்தாலும் வில்வத் தளிரை வதக்கி, சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் கொடுக்க குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories