தலைமுறைகளாக இயலாதென நினைக்கப் பட்டவற்றை… நிறைவேற்றி நவீன இந்தியா சாதித்துள்ளது: மோடி!

modi in france3 - 2026

தலைமுறை தலைமுறையாக இயலாது என ஒதுக்கப் பட்டவற்றை நிறைவேற்றி, நவீன இந்தியா சாதித்துள்ளது; நவீன இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன் என்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாரீஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்தில் அதன் தலைவர் ஆண்டிரி அசோவ்லேவை மோடி சந்தித்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற கம்யூனிடி விழாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 130 கோடி இந்திய மக்களுக்கும் நன்றி. இந்தியாவின் சிறந்த அணு இயற்பியலாளர் ஹோமி பாபாவை இந்நேரத்தில் தலை வணங்குகிறேன்.

இந்தியா தற்போது முன்னேறி வருகிறது. நாம் வெறும் ஆட்சி மட்டும் நடத்தவில்லை. நவீன இந்தியாவை உருவாக்கி வருகிறோம். நவீன இந்தியாவை உருவாக்கியதில் கர்வம் கொள்கிறேன்.

modi france - 2026

நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றி வருகிறோம். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

இது கால்பந்தாட்ட பிரியர்களின் தேசம். இங்கு நான் இப்போது வந்திருக்கிறேன். கால்பந்தாட்டத்தில் கோல் அடிப்பதன் முக்கியத்துவம் என்ன என உங்களுக்கு தெரியும். அது அளவிட முடியாத சாதனை.

modi in france1 - 2026

இதற்கு முன் நடக்கவே முடியாது என கூறப்பட்டவற்றை கடந்த 5 ஆண்டுகளாக இலக்காக நிர்ணயித்து அதை அடைந்துள்ளோம். நவீன இந்தியாவில் ஊழல், சலுகை, மக்கள் பணத்தை கொள்ளையடித்தல், பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராக, முன் எப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பதவியேற்று 75 நாட்களுக்குள் பல திடமான, துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் அறிவீர்கள்.

இந்தியா – பிரான்ஸ் இடையே உறவு நிலையாக உள்ளது. இந்தியாவும் – பிரான்ஸும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இணைந்து செயல்பட்டு வருகின்றன… என்றார் மோடி.

modi france pm - 2026

முன்னதாக, ஐரோப்பிய நாடான பிரான்ஸுக்குச் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் இமானுவல் மேக்ரனுடன் பேசினார். பின்னர், இன்று பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அவருக்கு பூர்ண கும்ப மரியாதையுடனும், தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நாகஸ்வர – மேளம் முழங்க தமிழ்ப் பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories