பன்றிகள்… முதியவரை குதறித் தின்று ரத்தம் குடித்த கொடூரம்!

Published:

IMG 20191017 WA0019 - 2026

முதியவரை குதறித் தின்று குருதி குடித்த பன்றிகள்….! நாகர் கர்னூலில் நடந்த கொடூரம்…!

உடல்நிலை சரியில்லாமல் வேதனையில் இருந்த முதியவரை மகன் அலட்சியமாக விட்டு விட்டதால் பன்றிகள் அவரைக் குதறித் தின்ற கொடூரம் நடந்துள்ளது.

நாகர் கர்னூல் மாவட்டம் நந்திவத்தனம் என்ற கிராமத்தில் இதயத்தை நொறுக்கும் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு வீட்டின் முன் இருந்த ஷெட்டில் இருந்து வெளியே வந்து கிராமத்தில் திரிந்து கொண்டிருந்த பன்றிகளின் வாயில் ரத்தம் சொட்டுவதை கவனித்த சிலர் சந்தேகப்பட்டு ஷெட்டிற்குள் சென்று பார்த்தபோது இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்!

நந்திவத்தனம் கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான கொண்டய்யா என்பவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனால் அந்த முதியவரின் மகன் அவரிடம் அலட்சியம் காட்டினான். வீட்டின் முன் ஒரு ஷெட் ஒன்றைக் கட்டி அதில் அவரை படுக்க வைத்தான். சரியான மருத்துவ சிகிச்சையோ உணவோ அளிக்கப்படாத நிலையில் அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

ஷெட்டில் படுத்துக் கிடந்த கொண்டய்யாவின் உடல் பாகங்களை பன்றிகள் கடித்துக் குதறிய செய்தி கிராமத்தை பதற்றத்தில் ஆழ்திதியுள்ளது. முதியவரின் தலை மற்றும் கைகளைக் குதறித் தின்று பன்றிகள் ரத்தம் குடித்துள்ளன!

இருப்பினும், இறந்த உடலைத் தான் அவை தின்றுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் மகனைத் தேடி வரும் போலீஸார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img