நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்: ஆர்.எஸ்.எஸ்., செயலர்!

Bhayyaji Joshi 1 - 2026

புவனேஸ்வரம், ஆக.18: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய காரியகாரி மண்டல் (ABKM) கூட்டத்தின் கடைசி நாளில் செய்தியாளர் கூட்டத்தில் அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்தவை…

ஏற்கெனவே பேரழிவு நிவாரணத்திற்காக RSS பணிபுரிந்து வந்த போதிலும், 1989 முதல், சங்கத்தின் திட்டமிட்டபடி சேவை திட்டங்களைத் தொடங்கியது. ஸ்வயம்சேவகர்கள் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

20 பெரிய தொண்டு மருத்துவமனைகள் மற்றும் 15 இரத்த தான வங்கிகள் ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

ஸ்வயம்சேவகர்களின் முயற்சியால், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3 முதல் 4 ஆயிரம் கண் தானம் நடக்கிறது.

ஸ்வயம்சேவகர்கள் கிராம அபிவிருத்தித் துறையிலும் பணியாற்றி வருகின்றனர். உள்ளூர்வாசிகளின் முயற்சிகள் மற்றும் ஆதரவுடன், 250 கிராமங்கள் முன்மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளன.

சங்கத்தின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதை ஏற்றுக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

16-17 வயதுடைய சுமார் 5 லட்சம் ஸ்வயம்சேவகர்கள் தினசரி ஷாகாவில் கலந்து கொள்கிறார்கள். 17 வயதுக்கு குறைவான 4 லட்சம் ஸ்வயம்சேவகர்களும் தினசரி ஷாக்காவில் கலந்து கொள்கிறார்கள்.

ALSO READ:  பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

59,000 கிராமப்புற மண்டலங்களில், 30,000 மண்டலங்களில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் பணி நடைபெறுகிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு – என்.ஆர்.சி., நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். ஊடுருவியவர்களை அடையாளம் கண்டு, ஒரு கொள்கை வகுத்த பின்னர் முறையான நடவடிக்கை எடுப்பது எந்தவொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதுவரை இந்த சோதனை அசாமில் மேற்கொள்ளப்பட்டது. இப்போது இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வழியில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. இப்போது நீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அயோத்தியில் ராம் கோயில் விஷயத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன . இது நடந்திருந்தால், உலகம் முழுவதும் பாரதத்தின் நற்பெயர் மேலும் அதிகரித்திருக்கும். இந்த முயற்சிகளை நாங்கள் வரவேற்றோம். ஆனால் இது நடக்கவில்லை.

இந்த விஷயம் நீதிமன்றங்களில் மிக நீண்ட காலம் நீடித்தது. இப்போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. நாம் அனைவரும் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

ஒரே குடிமைச் சட்டம் அமல்படுத்தப்படுவது என்பது பழைய கோரிக்கையாகும். இது அரசியலமைப்பை உருவாக்கும் பொழுதே செய்திருக்க வேண்டும். இது அனைவருக்கும் பயனளிக்கும் மற்றும் எந்த நாட்டிலும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு கருதி காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. காஷ்மீரில் ஒரு பாதுகாப்பான சூழல் நிகழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால் காஷ்மீர் இந்துக்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பிச் செல்ல முடியும்… என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories